Skip to main content

முத்தங்களால் நிறைந்த தேசம்..முத்தம் 23

 பனிவிழும் மலர் வனம்- ரிஹானா நீர்வீழ்ச்சி




டில்டிஸ் மலியுச்சியின் குளிர் கோடைகாலத்திலும் மைனஸ் பாகைக்குப் போகிறது. மலையுச்சியில் ஒரு சுரங்கம். மைனஸ் பாகை செல்சியஸ் எப்படியிருக்கும் என்பதைச் சுற்றுப்பயணிகளுக்கு உணர்த்த உண்டாக்கப்பட்ட சுரங்கம். இதனை மெல்லதான் நடந்து கடந்து வரமுடியும், தரையுயிலும் ஐஸ்கட்டிதான். சுற்றிலும் ஐஸ் கெட்டிதட்டிப்போய்க்கிடக்கிறது. 15 நிமிடம் ஆகிறது 150 மீட்டர் தூரத்தைக்கடக்க. உள்ளே புகுந்துவிட்டால் எப்போது வெளியே வருவோம் என்று பீதியடைந்துவிடுகிறோம்.. கடுங்குளிர். பலமுறை வழுக்கி விழுந்தவர்களைக் காணமுடிகிறது. நானும் கிடதட்ட விழுந்து விட்டேன். சமாளித்துக் கொண்டேன். பாதுகாப்பானதுதான் என்ற உணர்வு வெளியே வந்தவுடந்தான்  ஏற்படுகிறது.

மலையுச்சியிலிருந்து கீழே இறங்கி சூரிச் பட்டணத்தை அடைகிறோம். அங்கிருந்து றிஹானா நீர் வீழ்ச்சிக்குக் காரைச் செலுத்தினோம். உயரமான மலையும் காடும் உள்ள இடங்களில் நீர்வீழ்ச்சி இருப்பது சகஜம்தான். ஆனால் அது எவ்வளவு உயரத்திலிருந்து கொட்டுகிறது என்பதை மனம் கணக்குப் போட்டபடி இருந்தது. மருமகன் கூகலைப் பார்த்து  ரிஹானா இது மிகப்பிரபலமான நீர்வீழ்ச்சி என்றார்.
சூரிச்சிலிருந்து  பயணம் செய்தபோது சுவிட்சர்லேந்திலுள்ள மற்ற இடங்களைப்போல மலைத்தொடர்களோ, அழகிய காட்சியையோ காணமுடியவில்லை. நல்ல வெயில் படும் இடம் போலத்தெரிந்தது.  முப்பது நிமிடத்தில் இலக்கை அடைகிறோம். ஏராளமான பயணிகளைக் காணமுடிகிறது. அங்குள்ள சிற்றுண்டிக்கடையில் காலை உணவை முடித்துக்கொண்டு டிக்கட் வாங்க்கிக்கொண்டு உள்ளே போகிறோம்.


நீர்வீழ்ச்சியைக் காண பல பாதுக்காப்பான இடங்களை அமைத்திருந்தார்கள். நீர் புரண்டும் மலைகள் உருள்வதைப்போலக் கொட்டுக்கிறது. சுமார் 50 மீட்டர் தூரத்தில் நின்றாலும் நீர் பாலாபிஷேகம் செய்வதுபோலவே இருக்கிறது.  நீர்த் துமிகள் நம் மீது சொரிந்து குளிர்ச்சியஐ உணரமுடிகிறது. வெகு நேரம் நின்றிருந்தால் நனைந்துவிடக்கூடிய வாய்ப்பும் உண்டு. கொட்டும் நீரைத் தொட்டுணர ஒரு பிரத்தியேக இடம் இருந்தது.  அந்த இடத்தில் நின்று கொஞ்சம் எக்கினால் கொட்டும் நீரின் சுகத்தை அனுபவிக்க முடியும். சற்று நேரத்தில் நாம் நனைந்துவிடுவோம். ஆனால் மிக அண்மையில் நின்று நீர்வீழ்ச்சியைக் தோடுணர்ந்த அலாதி  மனநிலை உருவானதை மறக்கமுடியவில்லை.
ஆனால் யாரும் குளிக்க அனுமதி இல்லை நீர் புரண்டு புரண்டு சுழிக்கும் தன்மைகொண்டது. அதன் சீற்றத்தைக்கண்டாலே அச்சம் உண்டாகிறது.


ஆனால் உயரத்திலிருந்து நீர் கொட்டும் இடத்துக்கு படகுகள் பயணிகளை அழைத்துச்செல்கிறது  படகிலிருந்து இறங்கி ஒரு சிறிய குன்றில் மீது ஏறி நின்று நீர்வீழ்ச்சியின் அழகை தரிசிப்பதை நாங்கள் நின்றுகொண்டிருந்த கரையிலிருந்து காணமுடிந்தது. அந்தக் குன்றை அடைய அடைய படகின் மீது சொரியும் நீர்த்துமிகளைக் கரையிலிருந்தே காணமுடிகிறது. நீர்வீழ்ச்சியின் நனைவில் திளைக்கவேண்டுமென்றே பயணிகள் அங்கே போகிறார்கள். மலை உச்சிலிருந்து நீர் சுழித்து பொங்கிப் பிரவகித்து கொட்டுவதைப் பார்க்க இரு விழிகள் போதாது. நீர் என்றாலே தண்மை கொண்டதுதானே. உடலைமட்டும் நனைக்கவில்லை உள்ளத்தையும் நனைத்து சற்றே நம் சிந்தனையை அதன் பால் ஈர்த்துக்கொள்கிறது.


மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை. அங்கிருந்து இறங்கி காரை எடுத்துக்கொண்டு ஜெனிவாவுக்கும் கிளம்பினோம். ஜெனிவா என்றது ம் உங்களுக்கு என்ன நினைவு வருகிறது.  ஐக்கிய நாட்டுச் சஐ கூடுமிடம்தானே.
அந்தக் கட்டடத்தைக் கண நேருமா என்று சிந்தித்துக்கொண்டே இருந்தேன்.நாங்கள் வாங்கிய வாடகைக்  காரைஅங்கேதான் ஒப்படைக்க வேண்டும். அதன்ன் பின்னர் பாரிசுக்குப் பயனமானோம். சுவிசில் எடுத்த காரை வேறு நாட்டுக்குக் கொண்டு செல்லத் தடை. அதனால் ஜெனிவாவில் ஒப்படைக்க நேருகிறது.

ஜெனிவாவை நோக்கிப் போகும் சாலை நிறுத்தம் ஒன்றில் இரு குதிரைகள் ஒரு இழுவண்டியில் இழுத்துச்செல்லும் ஒரு பெண்மணியைப் பார்த்தோம். அக்குதிரை பந்தயக் குதிரை. பந்தயம் நடக்கும் வளாகத்துக்குக் கொண்டு செல்கிறாள் அதனை. ஆனால் உள்ளே இரு குதிரைகள் இருந்தன. இன்னொன்று எதற்கு என்றேன். அவள் பந்தயக்குதிரைக்குத் துணையாகப் பயணம் செய்ய என்றால். தூரம் பயண்ம செய்யும் போது துணை இல்லையென்றால் அது தொல்லைகொடுக்குமாம்.அல்லது சோர்ந்துவிடுமாம். எவ்வளவு கரிசனம்- பிராணிகள் மீது.




துமிகளைத் தொட்டணரும் இடம்












தொடரும்.......

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின