Skip to main content

முத்தங்களால் நிறைந்த தேசம்- முத்தம் 19

விடுதி நிர்வாகியோடு பொருதினோம்.


வெனிஸ் கடல் நகரின் அழகு கண்களிலேயே மிதந்தது. அங்கிருந்து மனம் வெளியேற மறுத்தது. ஆனாலும் 15 நாடகளில் சுற்றுலாவை முடித்துவிடவேண்டும். அடுத்து வெனிசிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு கிளம்பவேண்டும்.

சுவிட்சர்லாந்தில் 2 நாட்கள் கழிப்பதாகத் திட்டம். அழகிய நிலப்பகுதிகளால் நிறைந்த ஊர்.

வெனிஸை முடித்துக்கொண்டு விடுதியை வந்து சேரும்போது இரவாகிவிட்டிருந்தது. லாபியிருந்து அறைக்குப் போகலாமென்றால் இருளில் பாதை புலப்படவில்லை. எங்கள் அறை அதே விடுதியின் வேறு இடத்தில் இருந்தது. எனக்குக் கோபம் மெல்ல உருவாகிக்கொண்டிருந்தது. ஒரு வட இந்தியர் விடுதியின் நிர்வாகி போல இருந்து நிர்வகித்துக்கொண்டிருந்தார். எனவே முதலாளிலிக்கு லாபம் தேடித்தந்து நல்ல பெயர் எடுக்க அவன் மின்சாரக் கட்டணம் உயராமல் பார்த்துக்கொள்கிறானாம். இந்தியர்கள் வெள்ளைக்கார நிர்வாகத்திலும் நேர்மையின்மையை கற்றுக்கொடுத்துவிடுவார்கள். நான் நிர்வாகியிடம் ஏன் வெளிச்சமில்லை, எப்படித்தான் அறையைத் தேடிப்போவது என்று கேட்டேன். ஏன் போக முடியாது நான் விளக்கு வெளிச்சம் இல்லாமல்தானே புழங்குகிறேன் என்றான். விளக்கு இல்லாமல் இருக்காது அதனை ஏன் சுவிட்ச் ஆன் செய்யவில்லை என்றேன். என்னை நீ கேள்வி கேட்காதே. எனக்கு என்ன செய்வதென்று தெரியும் என்றான். பேச்சு கறாராய் போய்கொண்டிருந்தது. எல்லாவற்றையும் என் மகள் லாபியில் இணையம் பார்த்துக்கொண்டு கேட்டுக்கொண்டு இருந்தவள் எழுந்துவந்து என்னோடு சேர்ந்துகொண்டாள்.
இவனிடம் அதிகம் பேசவேண்டாம். இணையத்தில் இத்தாலியின் சுற்றுலா துறை சார்ந்து புகாரை எப்படி பதிவு செய்யலாம் என்று தேடு, என்றேன். மகள் உட்கார்ந்து தேடிக்கொண்டிருந்தாள்.
நான் சொல்லும் புகார்கள எல்லா வற்றையும் பட்டியலிடு என்றேன். சொல்லுங்க என்றாள். நாங்கள் தமிழில்தான் பேசினோம் என்றாலும் புகார் சார்ந்த சொற்களை ஆங்கிலத்திலேயே சொன்னேன்.
1.அறைக்குப் போகும் வழியில் போதிய வெளிச்சம் இல்லை. விளக்கைத் தட்டிவிடவில்லை.
2. அறையின் சன்னலை மூடமுடியாமல் சிக்கிக்கொண்டது.
3. அறையின் குளிர்சாதனம் தட்டிவிடப்படவில்லை.
4 . கதவின் பூட்டு சரியாக இயங்கவில்லை என்று சொல்லச் சொல்ல அவற்றைப்பதிவு செய்வது  போல பாவனை செய்தாள்.
நாங்கள் பேசி முடிக்கவில்லை எல்லாக் குறைபாடுகளும் சரி செய்யப்பட்டுவிட்டன. வெளியே வெளிச்சம் வந்தது. அறையில் குளிர்சாதனம் வேலை செய்கிறது என்று மருமகன் சொன்னார். மற்ற திருத்த வேலைகள் நடக்க ஆரம்பித்தன. நிர்வாகியின் கையில்தான் எல்லாம் இருந்தது. மேய்ன் சுவிட்ச் அவன் அருகில்தான் இருந்திருக்கிறது. நாங்கள் நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்று சொன்னவுடன் ஆள் ஆடிப்போய்விட்டான். வட இந்தியர்களோடு வனிகத் தொடர்பு  வைத்துக்கொள்வதைப்போல வதை வேறு ஒன்றும் இருக்காது. பணம் வாங்கும் வரை அவர்களும் தரும் தொல்லை அளவுக்கு மீறி இருக்கும். பணம் கொடுத்தும் வேலைகள் சரிவர நடந்திருக்காது எளிதில் யாரையும் நம்பவே மாட்டார்கள்.பயங்கர ஏமாற்றுப் பேர்விழிகள் இவர்கள். வேலையிலும் சுத்தம் இருக்காது.சொன்ன நேரத்தில் வேலை முடித்துத் தரமாட்டார்கள்.எனக்கு இதில் அனுபவம் உண்டு. ஆதாரமும் உண்டு.


மறுநாள் அதிகாலை ஆறு மணிக்கே மிளானோ கிளம்பினோம். புல்லட் ரயிலில் கிளம்பினால் மிலானோவை மணி11.25க்கு அடைகிறது. அங்கிருந்து சியாகோவுக்குப் பயணம். அங்கிருந்து இன்னொரு ரயில் பிடித்து சியாசோ போகவேண்டும். சியாகோவிலிருந்து சியாசோ போக ரயில் பிடிக்க  இடையில் 4கே நிமிடங்கள்தான் இருந்தது. ஆனால் அந்த பேசஞ்சர் ரயிலுக்கான பிலேட்பார்ம் எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை. மருமகன் அங்கும் இங்கும் அலைந்து கண்டுபிடித்து பைகளை இழுத்துக்கொண்டு ஓடினார். அவர் பின்னால் நாங்கள் ஓடினோம். ரயிலை தவறவிட்டால இன்னொருமுறை டிக்கெட் எடுத்தாகவேண்டும்.மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க இலக்கை அடையவும் ரயில் வந்து சேரவும் சரியாக இருந்தது.

சுவிட்சரலாந்தின் சியாசோ வந்து சேர்ந்தபோது மதியம் ஆகிவிட்டது. வயிற்றில் பசி. மூத்திரப்பை நிறைந்து தொல்லை வேறு. ரயிலில் கழிப்பறை இயங்கவில்லை.

ரயில் நிலையக் கழிப்பறைகள் யூரோவை வாங்க மறுத்தன. பிராங்க் என்ற செலவாணிதான் அங்கே செல்லுபடி. நான் தத்தளித்துக்கொண்டிருந்தேன்.நான் அலைமோதுவதைப் பார்த்த ஒருவெள்ளையன் என்ன இரண்டு பிராங்கு கொடுத்து உதவினான். ஒரு பிராங்கு மலேசிய ரிங்கிட்டுக்கு கிட்டதட்ட 3 ரிங்கிட்டுக்குச் சமம். சிறுநீருக்கே 3 ரிங்கிட்டா? 3 ரிங்கிடுக்காக ஒரு நாள் முழுதுமான சிறுநீரை கழிக்க முடியுமென்றால் பரவாயில்லை. ஆனால் அது முடியாத செயலாயிற்றே.


ரயில் நிலையத்துக்கு அருகிலேயே வட இந்தியர்  பிரியாணி கடை ஒன்று இருந்தது. கடையின் பெயர் சிவா என்றிருந்தது. சிவனின் ருத்ர தாண்டவப் படம் முகப்பிலேயே இருந்தது. அங்கே போய் பகல் உணவை முடித்துக்கொண்டோம். வட இந்தியாவிலிருந்து வேலைக்கு வந்தவன் மெல்ல சுதாரித்து கடை முதலாளியாகி

இருந்தான்.

இங்கிருந்து சுவிட்சர்லாந்து முழுதும் காரில் சுற்றப்போகிறோம் என்று மருமகன் கார் வாடகை எடுக்க வெளியே போனார். நாங்கள் ஸ்டடேசனில் காத்திருந்தோம்.
வெளியே பயணிகளுக்கு வழிகாட்ட, உதவ அரசு ஒரு பணிப்படையை நிறுவி இருந்தது. பயணிகள் அலைமோதுவதைப் பார்க்கும் பணிப்படை உடனே அவர்களை விசாரித்து உதவ அவர்களே முன்வருகிறார்கள். எங்கே போகவேண்டுமென்றாலும் அதற்கான விழிமுறையை பணிவோடு செய்து தருகிறார்கள்.
மருமகன் காரோடு வந்தார். காரின் பூத்தில் பைகளை நிரப்ப இடம் போதவில்லை. சமாளித்து உள்ளே சேர்த்தோம். ஐரோபிய நாட்டுக் கார்களில் வலது கைப்பக்கம் காரைச் செலுத்தவேண்டும். எனவே இடது கைப் பக்கம்தான் ஸ்ட்டெரிங் இருக்கும். பரவாயில்லை அதற்கென்ன என்றே நினைத்தேன். ஆனால் என் மருமகன் காரைச் செலுத்தும்போதுதான் எனக்குத் தலையே சுற்ற ஆரம்பித்தது. எல்லாம் தலைகீழ். எனக்குப் பதட்டம் கூடிக்கொண்டிருந்தது.









தொடரும்........

Comments

MUNIANDY RAJ said…
அருமை..இன்னும் எதிர்பார்க்கிறேன்

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின