Skip to main content

முத்தங்களால் நிறைந்த தேசம்- முத்தம் 18

கடற்கரை சொர்க்கம் எஸ் மார்க்கோஸ(சேய்ன்ட் மார்க்கோஸ்)- முத்தம் 18




























சுற்றுச்சூழலை மாசு படாமல் பாதுகாப்பதில் மேலைச் சிந்தனை மிக மதிக்கத்தக்கது. அவர்களின் எதிர்காலச்  சந்ததியினருக்கு அதனை அதன் இயல்போடு விட்டுச்செல்லவும், தன் முந்தைய தலைமுறையைப்போல போல பாதுகாக்கவும் அவர்களுக்கு தரும் படிப்பினைகளை நாம் பின்பற்றக் கற்றுக்கொள்ளவேண்டும். பள்ளிகளில் சுற்றுப்புற பாதுகாப்பு பற்றிய கல்வி அங்கே காலங்காலமாக போதிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் மட்டுமின்றி பொது இயக்கங்களும் கூடுதல் கவனத்தோடு செயல்படுகின்றன. நான் லண்டனுக்கு வந்தபோது ஒரு தனிமனித செயலைப்பார்த்து பிரமித்துப்போனேன். ஒரு பெண்  தன் வளர்ப்புபிராணியான நாய் ஒன்றோடு பட்டண மையத்தில் நடந்துவந்தார். அவர் கையில் ஒரு பாலித்தீன் பையும் இருந்தது. ஒரு கட்டத்தில் நாய் தெருவில் மலம் கழித்துவிட்டது. உடனே தன் கையில் வைத்திருந்த  நாய் மலத்தை தெருவிலிருந்து நீக்கி பாலித்தின் பையில் போட்டுக்கொண்டார். மேலை நாடுகளில் நாயைக் கொண்டு வருபவர்கள் கூடவே பையையும் கொண்டு வரவேண்டும் என்பது கறாரான சட்டம். கையில் பையில்லாமல் இருக்கக்கண்டால் அது ஒரு குற்றமாகும்.

இன்னொரு விசயத்தை சேய்ன்ட் மார்க்கோவில் பார்த்தேன். நம் கடலில் குப்பையையும் எண்ணெய் வண்டலையும் பார்க்கலாம். ஆனால் சேய்ன்ட் மார்க்கோசின் கடற்கரை நெடுக்க உள்ள பாறைகளின் பச்சைப்பாசி வளர்ந்திருப்பதைப் பார்க்கமுடியும். என் மருமகன் , தொலைக்காட்சியில் டோக்குமெண்டரி பார்ப்பவர்,   அந்தப் பாசி நிறைந்திருப்பது கடல் நீரின் தூய்மையைக் குறிப்பிடுகிறது என்றார் மருமகன். கடற்பாசியே சிறுமீன்களுகான உணவும் ஆகும். கடல்வாழ் பிராணிகளுக்கு ஆரோக்கியமாக வாழ்கின்றன என்று சொன்னால் பாசியின் செழிப்பை வைத்துதான் சொல்கிறார்கள்.  இதுபோன்ற கடலில்தான் கடல்வாழ் பிராணிகள் பெருக அதிக வாய்ப்புண்டு என்றும் சொன்னார். கடல் நீரை அள்ளிப்பார்த்தேன் , குடிக்கலாம் போல இருந்தது. நாம் இங்கே இந்த வழக்கத்தை எப்போதுதான் கொண்டு வருவோமோ தெரியவில்லை.

வெனிசில் மொத்தம் 22 கடற்கரை உல்லாச ஊர்கள் இருப்பதாகச் சொன்னார்கள். நாங்கள் வெனிசையும், எஸ்மார்க்கோசையும் பார்த்து முடியவில்லை. வெனிசில் மொத்தம் 177 கால்வாய்கள், 117 தீவுகள், 409 சிறு சிறு பாலங்கள் இருக்கின்றன். நாங்கள் பயணம் செய்த கொண்டோலா காதலர்களுக்கு மட்டுமானதல்ல! பிண வாகனமாகவும். திருமணத் தம்பதியினரின் சொகுசு வாகனாமாகவும் செயல்படுகிறது. இங்கே நமக்கு பிணவண்டி பிரேதத்துக்கு ஆகாது, பிரேத வண்டி திருமணத்துக்கு ஆகாது.
வெனிசுக்கு மட்டும் ஒரு நாளைக்கு 50000 சுற்றுப்பயணிகள் வந்து குவிகிறார்கள். அந்நியச் செலவாணியிலேயே நாட்டை நிர்வகித்துவிடலாம். 

அடுத்து நாங்கள் பாரிஸுக்குப் போகவேண்டும்.

கடற்கரை நெடுக்க உணவு விடுதிகள் இருந்தன. இரவு உணவை இங்கேயே முடித்துக்கொள்ளலாம் என்று சொன்னார் மகள். விடுதியைப் போய்ச்சேர இரவாகிவிடும் என்றார். அதைவிட உணவு வகைகளும் மேசைகளும் பரிமாறும் விதமும் அட்டகாசமாக இருந்தது. நாவில் எச்சில் ஊறியது.சாப்பிட உட்கார்ந்தோம். உணவகத்தின் உள்ளே யாருமே  யாருமே இருக்கவில்லை. எல்லாமே வெளியேதான் அமர்ந்து உண்டுகொண்டிருந்தார்கள். ஏன் என்று பணியாளைக் கேட்டே உள்ளே உணவு மேசையின் வாடகை பத்துமடங்கு அதிகம் என்றார்.
அப்படியானால் வெளியேயயும் வாடகையா என்று கேட்டேன் ஆமாம், ஒரு நபருக்கு 2 யூரோக்கள்!
சரி ஆர்டர் செய்த உணவு வந்தது. சாப்பிடலாம் பசிக்கு ஏது உணவு சாதி?  கடைசியில் மகள் கேட்டால் வேறு மேசையைக் காட்டி அது போன்ற உணவு ஒரு தட்டு கொண்டுவா என்று. கொண்டுவந்தான். அடப்பாவிகளா கீரைகளின் மேல் பொறித்த நெத்திலி, இறால், சிறுமீன்கள் அவ்வளவுதான்.  உணவு பறிமாறலின் அழகில் மயங்கியதல் வந்த வினை?விலை! நாம் பருப்பு சாம்பாருக்கு பொறித்துண்ணும் நெத்திலியே மேல்.மீண்டும் வாயில் எச்சில் ஊறியது...துப்புவதற்கு!

அங்குள்ள நினைவாலயங்கள், தேவாலயங்கள், கட்டடங்கள் எல்லாமே பிரம்மாண்டமானவை. எட்டி இருந்தே பார்க்கலாம். அருகில் போனால் கழுத்து வலிதான் மிஞ்சும். கடற்கரை நெடுக்க 20 க்கு மேற்பட்டஓவியர்கள் நம் முகத்தை வரைந்து கொடுக்கக் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு சில நிமிடங்களே போதும்! இசைக்கருவியை இசைத்துப்பாடும் தெருக்கலைஞசர்கள்.

நாங்கள் காலம் தாழ்த்தாது, மீண்டும் பெர்ரியிலேயே வெனிசின் விடுதிக்கு வந்து சேர்ந்தோம். விடுதியை நிர்வகிப்பவன் ஒரு வங்காளதேசியாக இருக்கலாம். ஆங்கிலம் பேசுகிறான் ஆனால் ஆசிய (இந்திய) மனிநிலையிலான நிர்வகிப்பு. குறைகளை நிவர்த்தி செய்யக் கேட்டதற்கு சத்தமெல்லாம் போட்டான். அடுத்த தொடரில் விவரமாகச் சொல்கிறேன்...

                                            வெனிஸ் மேலும் சில காட்சிகள்
                                                 
Add caption












தொடரும்.....

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின