Skip to main content

முத்தங்களால் நிறைந்த தேசம். முத்தம் 12


 புல்லட்  டிரேய்னில் பிரியாணி உணவு-  முத்தம் 12

காலையில் மாஸ்ல்லா விடுதியைக் காலி செய்துவிட்டு ரோமின் செண்டரல் நிலையத்துக்கு வருகிறோம். அதற்கு முன்னால் நாங்கள் முன்தினம் உணவுக்கடையில் சாப்பிட்ட பிரியாணி வாங்கிப் பொட்டலம் கட்டிக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம். மருமகன் இன்னும் கொஞ்சம் தள்ளி இன்னொரு பிரியாணி கடையிருப்பதாகச் சொல்லி அங்கே போய் நான்கு பொட்டலத்தைக் கட்டிக்கொண்டு வந்துவிட்டார். ரயிலிலேயே சாப்பிடுவதாகத் திட்டம்.
சாதாரண ரயில்
அதிவேக புல்லட் ரயில்
எப்போதும் போலவே கூட்டம் அலைமோதுகிறது. அதிவிரைவு ரயிலான புல்லட் டிரேய்ன படமெடுக்காமல் மண்ணில் முகம் சாய்த்து படுத்து க் கிடக்கும் பெரு நாகம்போல் காட்சி யளிக்கறது. அதில்தான் ஏறிப்' பியெரண்ஸ்' போகப்போகிறோம் என்று தெரிந்தும் அதன் முன்னால் நின்று படம் எடுத்துக்கொண்டோம்.
பயணிகளை சந்திக்க காத்திருக்கும் களவாணிப் பெண்


காவல்துறையால் அழைத்துச்செல்லப்படும் களவாணி
அந்த நிலையத்தில் பயணிகளுக்கு உதவுவதற்கென்றே சில பெண்கள் அங்குமிங்கும் அலைந்து பயணிகளிடம் பேச்சுக்கொடுத்துக் கொண்டிருந்தனர். எல்லாம் அழகிய இளம் பெண்கள். ஆங்கிலம் சரளமாகப் பேசுகிறார்கள். என் மருமகன் பூத்தில் நான்கு டிக்கட்டுக்குப் பதிவு செய்து கொண்டிருக்கும் போது இத்தாலியப்  பெண்  ஒருவர் அவரை அணுகிப்பேசி உதவப் போனாள். மருமகன் அவளுக்கு இடம் கொடுத்து நகர்ந்து  நின்றார். இருபது முப்பது வினாடிக்குள் அங்கு பணியிலிருந்த காவல் அதிகாரி, அவளை நெருங்கி ஏதோ பேசி அழைத்துக்கொண்டு போய்விட்டார்.
இன்னொரு ஏமாற்றுப் பெண்
பின்னால்தான் தெரிந்தது  இவர்கள் களவாணிப் பெண்கள் என்று.
உங்களுக்கு உதவுவதுபோல வந்து கீ இன் செய்யும்போது கிரெடிட் கார்டு எண்ணை நினைவில் வாங்கிக்கொள்வார்களாம். அதற்குப் பிறகு அவர்கள் கைவரிசையைக் காட்டி விடுவார்கள். காவல் அதிகாரிகள் நாங்கள் அங்கே பயணத்துக்காக நின்றிருந்த போது , பூத்தில் உதவவரும் ஐந்தாறு பெண்களை அழைத்துச் சென்றார்கள். ஆனால் பின்னர்'விடுதலையாகி' வழக்கம்போலவே புதுப்பயணிகளைத் தேடி அணுகி 'உதவ' முன்வந்தார்கள்.
அவர்களை ஏன் காவல் அதிகாரிகள் தண்டிக்கவில்லை என்று யோசிக்கும் போது, தவறு நடப்பதற்கு முன்னரே அவர்களை நம்மிடமிருந்து அகற்றிவிடுகிறார்கள் அதனால். அவர்களை எந்த வகையிலும் குற்றம் சாட்ட இயலாது. நான் உதவத்தான் போனேன் என்பார்கள். கிரடிட் கார்டு எண்கள் அவர்கள் மனதில் பதிந்துவிட்டாலும் காவலர்களுக்குத் தெரியபோவதில்லை. எதை வைத்து அவர்களை தண்டிக்க முடியும்?
அதனால் சக பயணிகளைப் போல அங்கே அலைந்தபடியே இருந்தார்கள் இந்தக் களவாணிகள். நாம் அவர்களை எளிதில் அடையாளம் காணமுடியும். கைகளில் பைகள் இருக்காது. எந்நேரமும் தங்களுடைய கஸ்டமைரை தேடிப்பிடித்து வலைக்க முற்படுவார்கள்.
இந்தப் பெண்களின் நடவடிக்கைகளை இங்கிருந்து அகற்ற முடியாது  போலவே  தெரிந்தது. எதை வைத்து அகற்றுவது என்ற கேள்வி எழுகிறது. குற்றச் செயலில் பிடிபடாதவரை இவர்கள் நிரபராதிகளே. காவலர்களுக்கு வேண்டியது எல்லாம் கிரடி கார்ட் எண் இவர்கள் கைவசம் போய்விடக்கூடாது என்பதே.  தலையாய நோக்கம் அத்வே!.
ஐரோபிய நாடுகளில் பொது இடங்களில் சிகரெட் புகை நெடியைத் தவிர்க்க முடிவதில்லை. எனக்கு ஊது பத்திப் புகையும் , சிகரெடு புகையும், கந்தகப் புகையும் ஒன்றுதான். ஒரு பக்கம் லேசான அசௌகரியமான தலைவலி துவங்கிவிடும். அதனாலெயே என் மனைவி என் மேல் இருக்கும் கோபத்தை காட்ட வீட்டில் ஊதுபத்தி ஏற்றிவைத்து விடுவாள்.
சாய்ந்த கோபுரம்

எந்தவித அங்க அசைவும் இல்லாமல் மணிக்கு 300 கிலோமீட்டர் சீறிச் செல்கிறது புல்லட் டிரேய்ன். நம்மால் அதை உணரவே முடியாது. சன்னல் வழியாகப் பார்க்குபோது அதன் அதிவேகம் புலனாகிறது. மேசையில் ஒரு கிண்ணம் நிறைய நீர் வைத்திருந்தாலும் அதன் நீர்மட்டம் அசையாது இருக்கும். ஆனால் அநத வேகத்தினை என்னாலும் மனைவியாலும் உணரமுடிந்தது. நம் வயதான காதுகளுக்கு  வேகக் காற்றின் அழுத்தம் வந்து அடைக்கிறது. உடனே  காதுப் பாதுகாப்பு தக்கையை அணிந்துகொண்டு சமாளித்தோம்.
புல்லட் ரயிலினுள்
அதிவிரைவு ரயிலின் உள்ளே பயணிகளின் சௌகரியத்துக்காக சைக்கில் மாட்டி வைக்கும் இடம்,  நோய்வாய்ப்பட்டால் சமபந்தப்பட்டவரைக் அழைக்கும் பஸ்ஸர், அழகான இருக்கைகள், மேசைகள் எல்லாம் உண்டு.
அந்தப் பயணத்தின்போதுதான் நிம்மதியாக அமர்ந்து பிரியாணி உண்டோம். நாங்கள் கைகளில் பிசைந்து உண்பதை பார்த்த இத்தாலியர்கள் கொஞ்சம் சங்கோஜப்பட்டிருக்காலம். அவனிடம் போய் கைகளில் பிசைந்துண்ணும் பிரத்தியேகச் சுவை பற்றி விரிவுரையா செய்யமுடியும்?

நாங்கள் , இத்தாலியின் இன்னுமொரு பெரிய நகராமான பியரெண்சே நோக்கி  போய்க்கொண்டிருக்கிறோம். பிசா சாய்ந்த கோபுரம் உண்மையில் பிசா என்ற நகரத்தி இருந்தது.அதுவும் இத்தாலியப் பிரதேசம்தான்.

 ரயிலேறிஅங்கு போக  இப்போலியில், இறங்கி மீண்டும் ஒரு மணி நேரப் பயணத்தில் பொந்தரெல்லா கடந்து பிசா பிரதேசத்தை வந்தடைய வேண்டும். இப்போலி வந்தவுடன் இறங்கிக்கொண்டோம். ஆனால் அதன் ஸ்டேசனைப் பார்த்தால் பெரிய பட்டணம் போலத் தெரியவில்லை. அருகிருந்த போக்கு வரத்து அதிகாரியைக் கேட்டவுடன்தான் இன்னொரு இப்போலி 15 நிமட நேரப் பயணத்தில் இருப்பதாகச் சொன்னார்கள். நல்ல வேளையாக அது நகர்வதற்கு முன்னர் மீண்டும் ஏறி அமர்ந்துகொண்டோம். அதாவது  இப்போலியிலிருந்து மீண்டும் ரயிலேறி வந்த திசைக்கெ திரும்பி இத்தாலியிலுள்ள பிசாவுக்கு பயணப்படவேண்டும். பிராண்ஸியாவில்  ஒரு அரைமணி நேரமே கழித்திருந்தோம் என்றுதான் சொல்லவேண்டும்.
அசையாமல் இருக்கும் சிலை மனிதன்

பிசா ஒரு பிரதேசத்தின் பெயர் மட்டுமே. அதுவே சாய்ந்த கோபுரத்துக்குப் பெயராகவும் அமைந்துவிட்டது. கொலீசியம் ஏழு அதிசயங்களில் ஒன்று எனத் தெரியும். இத்தாலியிலேயே  இன்னொரு உலக அதிசயமாகத் திகழ்வது இந்த சாய்ந்த கோபுரம்தான். ஏறத்தாழ ரயில்வே ஸ்டேசனிலிருந்து நான்கு கிலோ மீட்டர் நடந்தால்தான் பிசா சாய்ந்து இருப்பதைப் பார்க்கமுடியும்.

இதனை ஒரு நடை நகர் என்றே பிரகடனப் படுத்துகிறார்கள். அநேகம் பேர் நடந்தே செல்வதைப் பார்க்கிறோம். பிசா பார்க்கும் நம்முடைய ஆர்வத்தை அந்த நடை முழுதும் அனுபவிக்கவே இதனை நடை நகரம் என்று அழைக்கிறார்களோ தெரியவில்லை. ஆனால் நான் அப்படித்தான் நினைக்கிறேன். டேக்சி போன்ற பொது வாகன வசதி இருந்தாலும் நடைக்கே முன்னுரிமை. கடைத்தெருக்கள்.விடுதிகள், உணவகங்கள். நினைவுச்சின்னங்கள் விற்கும் அங்காடிகள், என நம்மை பாராக்கு பார்க்கவும் செய்கிறது. ஆனால் சாய்ந்த கோபுரம்தான் நம் இலக்காக இருப்பதால், பாராக்கு பார்ப்பது திரும்பி வரும் போதே செய்ய வேண்டிய ஒன்றாகவே இருக்கிறது.

நாங்கள் கடைத்தெருவை கடந்து செல்லும்போதே மழை இருட்டிக்கொண்டு வந்தது. லேசான தூற்றலும் தொடங்கியிருந்தது,

இரண்டு கிலோமீட்டர் நடந்தும், பிசா கண்ணுக்கே தென்படவில்லை. நடந்துகொண்டே இருந்தோம்.

தொடரும்.....



Comments

வணக்கம்
ஐயா

பார்க்க முடியாத இடங்களை தங்களின் பதிவு வழி பார்க்க கிடைத்தமை மகிழ்ச்சியாக உள்ளது. படங்கள் மேலும் அழகாக உள்ளது பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த