Skip to main content

ஜெயமோகனோடு மலேசியாவில் ஒரு இலக்கிய முகாம்


குழப்பம் 4

ஜெமோவோடு பீஷ்மரும் அம்பையும் மற்ற துணை நடிகர்களும்

          
                       விரிவுரைஞர் குமாரசாமி அன்று எப்போதுமற்ற உற்சாகத்தில் இருந்தார். ஜெமோவின் தீவிர வாசகர் அவர். ஜெமோவை தன் பினாங்கு கல்லூரிக்கு வரவேற்பதில் அவரின் ஆர்வம் அவரை வேறு ஒரு குமாரசாமியாகக் காட்டியது. அறிவுலகம  சார்ந்து இயங்கும் மனிதர்களைப் பார்க்கும்போதெல்லாம் நமக்கு உற்சாகம் வந்துவிடுகிறது. பினாங்கு பயணமான எங்கள் குழு  தீவிர இலக்கியத்தை முன்னெடுக்கும் சிறிய குழு. திங்களுக்கு ஒரு முறை இலக்கியம் பற்றி பேசுவதற்கு கூடும்போதெல்லாம் இனம்புரியாத மகிழ்ச்சியில் இருப்போம். ஜெயமோகனின் வருகை எங்களுக்கு கூடுதல் ஆனந்ததைத்க் கொடுத்திருந்தது.

கல்லூரி நிகழ்ச்சியைத் தாமதமில்லாமல் தொடங்கி இருந்தார்கள். தொடக்கமே அம்பையும் பிதாமகரும் தோன்றும் ஒரு காட்சிக்கு மேடை தயார் நிலையில் இருந்தது.

அம்பை பீஷ்மரை மணம் புரிய கெஞ்சி பின்னர் அவர் அதற்குத் தான் சரியானவர்  என்று வாதாடி,அதற்கு  பீஷ்மரை உக்கிரமாக எதிர்கொள்ளும் காட்சி அரை மணி நேரம் சோடைபோகாமல் நடித்துக் காட்டப் பட்டது. அக்குறு நாடகத்துக்கு எரிதழல் என்று மிகப் பொருத்தமாகப் பெயரிடப்பட்டிருந்தது.பீஷ்மர் தன்னை பிஷ்மராகவே மாற்றிக்காட்டினார். அம்பை பெண்மையின் புனிதத்தையும், வன்மத்தையும் நடித்து அரங்கத்தைக் கவர்ந்தார். எனக்குப் பிடித்திருந்தது. மிதமான ஒப்பனை, மேடை அலங்காரம் நாடகத்துக்கு மெருகூட்டியது. ஜெயமோகனின் வெண்முரசின் முதற்கனலில் வந்த ஒரு சிறு பகுதி.  அவரின் புனைவால் அது மிக முக்கிய இடத்தைப் பிடித்திருந்த காட்சி. வார்த்தைகளுக்குள்ளேயே காட்சிப்பிம்பத்தை உருவாக்கிக் காட்டியிருந்தார் ஜெ. அதனை கல்லூரி மேடைக் காட்சி சோடைபோகாமல் செய்து மறு உயிர் கொடுத்திருந்தது.

 நாடகம் முடிந்து நான் பீஷ்மரை கைகுலுக்கி வாழ்த்தினேன். அப்போதும் அவர் பீஷ்மரவே என்னை எதிர்கொண்டார்.ஒருகால் அவர் ஒப்பனையில் இருந்ததால் மீண்டும் மாணவராகாமல்  இருந்தாரோ என்னவோ.பாத்திரத்துக்குள் ஒன்றிப்போயிருக்ககூடும். அம்பை என் வாழ்த்தினை ஒரு புன்னகையோடு ஏற்றுக்கொண்டாள். சமீபத்தில் நடந்த மலேசிய வடமண்டல நாடகப் போட்டியில் out standing  நாடகமாக விமர்சிக்கப்பட்டு முதலிடத்தைப் பெற்றிருக்கிறது என்று குமாரசாமி சொன்னார்.அந்நாடகத்துக்கு அத்தகுதியைத் தாராளமாக்  கொடுக்கலாம். விரிவுரைஞர்கள், நடிகர்கள் பாராட்டுக்குரியவ்ரகள்.

அன்றைய ஜெயமோகனின் உரை சிந்தனைத் திறப்புக்கான சாவியாக அமைந்திருந்தது.  கல்லூரிகளில் பேச விருப்பமில்லாதவர் ஜெமோ. கல்லூரி  ஆசிரியர்களோ மாணவர்களோ வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்கள். அவர்களிடம் பேசி ஆகப்போவது ஒன்றுமில்லை என்று சொல்வார். கல்லூரி நிகழ்ச்சி ஏற்பாடு செய்தாயிற்று. வேறு வழியில்லாமல் அவரை அங்கே அழைத்துக்கொண்டு சென்றோம். அவரைப்பற்றிய ஒரு பவர் பொய்ன்ட் காட்சித் தொகுப்புக்குப் பிறகு ஜே உற்சாகமாகவே பேசினார்.

கல்லூரி பாடத்திட்ட போதனையோடு பெரும்பாலான மாணவர்கள் வாசிப்பதை நிறுத்திக்கொள்கிறார்கள். மேற்கொண்டு சிந்திப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லாதவர்கள். அவர்கள் ஏன் மாற்றுச் சிந்தனையை மேற்கொள்ளவேண்டும், அதனால் அவர்கள் அடையப் போகும் அக எழுச்சி பற்றி மிகுந்த உற்சாகத்தோடு பேசினார். அவரின் பேச்சின்போது மாணவர்கள் கவனம் அவரை மையமிட்டிருந்தது. தொடர்ந்து உரையாடலுக்கான நேரத்தில் வெண்முரசு சார்ந்தே வினாக்கள் எழுப்பப்பட்டன. குமாரசாமி ஜெமோவின் வலைத்தளத்தை ஆர்வத்தோடு அறிமுகப்படுத்தியிருக்கிறார் என்பது தெளிவானது. அவர்கள் வாசித்தற்கான அறிகுறிகள் அவ்வினாக்கள்.
 நாடக இயக்குனர் கோமதியோடு

எரிதழல் குறுநாடகத்தைப் பற்றி இயக்குனர் கோமதி,  ஜெமோவின் அபிப்பிராயத்தைக் கேட்டார். ஜேமோ தனக்கு மிகவும் பிடித்திருந்தது என்றார். அந்நாடகத்தை ஒரு காவிய நாடககமாக  முன்னெடுத்திருந்தால் மேலும் செறிவாக இருந்திருக்கும் என்றார். மலேசியாவில் அது சரியாக ரசிக்கப்படாது என்று எண்ணிக்கொண்டேன்.
மாணவர்கள் அவரோடு நிழற்படம் எடுத்துக்கொள்ள ஆரவமாக இருந்தனர். கல்லூரியில் பேசுவது உற்சாகக் குறைவானது என்ற தன் அபிப்பிராயத்தை ஜெமோ மலேசிய மண்ணில் அன்று மாற்றிக்கொண்டிருக்கக்ம் கூடும்.

மறுநாள் இன்னொரு ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் அவரின் நிகழ்வு. அது ஆஸ்ரமத்திலிருந்து ஒரு மணி நேரப் பயணம். அது இரவு நிகழ்ச்சியாக அமைந்திருந்ததால் அன்று காலை மலேசியாவில்  சோழர் ஆட்சி காலத்தில் கடாரத்திலும் (மலேசிய வடக்கு மாநிலம்) அவன் கால் பதித்த அரசாண்ட ஒரு நிலப்பகுதி ஒரு வரலாற்றுச் சான்றாக இன்றைக்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த வரலாற்றிடத்தை 2010 லேயே ஜெமோ பார்த்திருந்தார். ஆனால் அவரோடு வந்த கிருஷ்ண்னும், ராஜமாணிக்கமும் பார்க்க ஆவலாய் இருந்தார்கள். அவர்களை அங்கு கொண்டு செல்வது யுவாவின் பொறுப்பு. அன்று மதியம் எங்கள் வீட்டில் அவர்களுக்கு மதிய விருந்துபசரிப்பு.

கடாரத்தில் சோழர் காலத்து வரலாற்றுச் சான்றுகள்

அவர்கள் வருகைக்கு நான் வீட்டில் காத்திருந்தேன். என் வீடு சோழ அரசு நிர்வகித்த கடாரத்துக்கு (லெம்பா பூஜாங்- கடல் நாகம்) என்று வரலாற்றிடத்துக்கு அருகேதான் இருக்கிறது. அவர்கள் மணி 3.00 வரைக்கும் வீடு வந்து சேரவில்லை!


தொடரும்...



 

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின