Skip to main content

ஜெயமோகனுடன் மலேசியாவில் ஒரு இலக்கிய முகாம்- கன்னி முயற்சி

குழப்பம் 2

ஜெயமோகனிடம் மலேசிய தொடர்பு எண் இருக்காது. பாலமுருகனுடன் தொடர்பு கொண்டு அவரிடம் தொலைபேசியைத் தரச்சொன்னேன். அவர் ஜெயமோகனோடு வந்த ராஜமாணிக்கத்திடம் கொடுத்துவிட்டார். ஜெயமோகனிடம்தான் பேசுகிறேன் என்று நினைத்துக்கொண்டு முகமன் விசாரிக்கத் தொடங்கினேன். குரல் வேறமாதிரி இருக்கிறதே என்ற் பிரக்ஞைகூட எழவில்லை. என்ன பதில் சொல்வது என்ற பதற்றத்தில் குரலை அடையாளம் காண மறுத்தது. சற்று சுதாரித்த பின்னரே இது ஜெமோ குரலில்லையே என்றே அடையாளங்கண்டு ,

" நீங்கள்..." என்றேன்.

"சார் நான் ராஜமாணிக்கம் ... ஒரு நிமிஷம்," என்றுவிட்டு ஜெமோவிடம் கொடுத்தார்.

"புண்ணியவான் பேசுறேன், நலமா வந்து சேந்தீங்களா ஜெ?" என்றேன்.

" எல்லாம் நல்லாருந்தது.." என்றே துவங்கைனார். வார்த்தைகளில் கோபம் ஏதும் தென்படவில்லை. எப்போதும்போலவே மென்மையாகவே பேசினார். தொலைபேசியில் அவரோடு உரையாடும் போது நமக்கு உற்சாகம் வராது. நேரில் பேச ஆரம்பித்தால் நமக்குள் ஒரு துடிப்பையும் ஆர்வத்தையும் கிளர்த்திவிடுவார். நான் இருமுறை அவருடைய ஊட்டி இலக்கிய முகாமில் பேசி மகிழ்ந்திருக்கிறேன். என் பதற்றம் நொடியில் சரிந்தது.

" ஏன் சார் ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சி போட்டிருக்கீங்க..ஓய்வில்லாம இருக்கும்போலிருக்கே...எனக்கு மேடையில பேச விருப்பமில்லியே," என்றார்.

"ஜெ...உங்களுக்கு நிகழ்ச்சி நிரல் அனுப்பி இருந்தேனே....."

"ஆமா கல்லூரி நிகழ்ச்சிய எடுக்கச் சொன்னேனே...."
விரிவுரைஞர் குமாரசாமி, தமிழ் மாறன், நண்பர்

"இல்லிங்க ஜெ.. நீங்க ... குறுகிய கால வருகை மேற்கொண்டிருக்கீங்க..உங்க வாசகர் உங்கள பாக்க விரும்புறாங்க அதான் .." என்றேன்.

"ஒரு நிகழ்ச்சிய ரத்து செய்திடுங்க," என்றார்.

"சரிங்க ஜெ செய்திடலாம்," என்று வாக்கு கொடுத்தேன்.

பின்னர் சுவாமியைக் கூப்பிட்டு, நான் பேசிவிட்டதாகச் சொன்னேன்.

"ஓ பேசிட்டீங்களா.." என்ற எப்போதும் போலவே இன்ப அதிர்ச்சியோடே கேட்டார். 

"அவர் கோபத்தோடெல்லாம் இல்ல சாமி... நிகழ்ச்சி நெடுக்க இருக்குன்னு கொற பட்டுக்கிட்டாரு ...அவளவுதான்" என்றேன். "அப்பாடா," என்றார். "நான் இப்போ பேசுறேன்," என்றார். அப்போது அவரிடம் உற்சாகம் துள்ளியது.

ஒரு நிகழ்ச்சியை ரத்து செய்தாக வேண்டும். உடனடியாகத் தகவல் சொன்னால்தான் ஏது செய்ய முடியும். கல்லூரி தவனை விடுமுறை துவங்குவதற்கு கடைசி வாரம். அதற்குள் ஒன்றை ரத்து செய்தே ஆகவேண்டும்.
எந்தக் கல்லூரியை நீக்குவது. சரி முதல்ல தகவலை விரிவிரைஞர் தமிழ் மாறனிடம் தகவல் சொல்வோம். என்ன சொல்கிறார் பார்ப்போம் என்று போன் செய்தேன். அவர் கனிவோடு பேசக்கூடியவர். நல்ல அபிப்பிராயம் சொல்லாலாம்.
விரிவுரைஞர் தமிழ்மாறன், யுவராஜன், ஜெயமோகன்

" சார்.. நான் ஏற்பாடு செஞ்சிட்டேன் ஒன்னும் செய்ய முடியாது போல இருக்கே சார்."
"இல்லிங்க மாறன்  உங்கள ஐடியாதான் கேட்டேன்," என்றேன்.
அடுத்து துங்கு பைனுன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர் மணியரசனிடம் தொடர்புகொண்டு, ரத்து செய்ய முடியுமா.. முயற்சி செய்து பாருங்கள்.." என்றேன்.
"அப்படியா..... எங்க கல்லூரி இயக்குனர்ல்லாம் வராங்கா ...அதுதான் இடிக்குது.." என்றார்.
"முயன்று பாருங்க...இல்லனா பரவால்ல" என்றேன். அந்தக் கல்லூரி இலக்கிய நிகழ்ச்சியைக்கூட ஒரு அதிகாரப் பூர்வ விழாவாகவே எடுப்பார்கள். இலக்கிய விழா எளிமையாக இருந்தால் போதும் என்றே  தீவிர இலக்கியவாதிகளின்  இயல்பான எண்ணமாகும்.

மறுநாள் எனக்கு மணியரசன் மீண்டும் தொடர்பு கொண்டு.. ஒரு நல்ல தகவலைச் சொன்னார்." சார்.. நீஙக எதிர்பார்த்த மாதிரியே  நான் நிகழ்ச்சியை ரத்து பண்ணிட்டேன்," என்றார். நான் எதிர்பார்க்காத முடிவு இது. மனசு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது. ஜெமோவை அலைக்கழிக்கக் கூடாது என்ற எண்ணம் தவிர வேறொன்றறியேன் பராபரமே. மணியரசனுக்கும் நன்றி சொன்னபோதூ 'அப்பாடா' என்றிருந்தது.

ஜெமோவுக்கு மறுநாள் மலேசிய எழுத்தாளர் சங்கப் பணிமனையில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது. முனைவர் கார்த்திகேசு நிகழ்ச்சி வேண்டுமென்றே கேட்டுக்கொண்டபடியால் நடந்தது. அந்நிகழ்ச்சி தொடக்கக் கட்டத்திலேயே கிட்டதட்ட நடக்காது இருந்தது. ஆனால் முனைவர் கார்த்திகேசு முன்னெடெடுத்து அதனை நடத்துவதில் முனைப்பாக இருந்தார். மலேசியாவில் ரெ.கா அவரின் தொடக்ககாலத்திலிருந்தே வாசித்து வருபவர். இதனை எழுத்தாளர் யுவராஜன் சொன்னார். "

"நான் அவரை வாசிப்பதற்கு காரணம் ரெ.காதான். அவரின் ரப்பர் நாவலைப் படித்துவிட்டு ரெ.கா எழுதிய குறிப்புதான் என்ன அவர் பக்கம் இழுத்தது என்றார். அதற்காக அவரை நான் பெரிதும் மதிக்கிறேன் சார்." உணமைதான் நானும்  மாடன் மோட்சம் படித்துவிட்டு ரப்பரைத் தேடி, கன்யாகுமரியைத் தேடி... அவரின் தடித்த சிறுகதைத் தொகுப்பைப் படித்து... இப்போது காலையில் பசியாறுவதே  வெண்முரசுதானென்றாகிவிட்டது. அவருடைய வாசகர்கள் எத்தனை பேர் வெண்முரசால் காலைஉணவை skip செய்துவிடுகிறார்கள் என்று தெரியவில்லை.

என் வீட்டுக்கு அவர் வந்தவுடன் வெண்முரசை பத்து ஆணுகளில் எழுதி முடிக்கப் போவதாக சங்கல்பம் செய்திருக்கிறீர்களே. அதனைப் படித்து முடிக்கும் வரை என் ஆயுள் நீடிக்குமா என்று கேட்டேன்.
அதற்கு அவரோடு வந்த கிருஷ்ணன் சொன்னார். சார் பத்து ஆண்டுகள் என்ற காலக்கெடுவுக்கு முன்னாலேயே பத்து வெண்முரசு நாவல்களை எழுதி முடித்துவிடுவார் பாருங்கள் என்றார். ஆம் அந்தக் காலவரைறையரை பத்து ஆண்டுகள் நீளாது. அதற்கு சில ஆண்டுகள் முன்னாலேயே முடித்து விடுவார். ஏனெனில் வெண்முரசு எழுதத் துவங்கிய முன்று மாதத்துக்குள்ளாகவே முதல் நூல் 'முதல் கனல்' வந்துவிட்டது. இதோ இந்த மே மாதத்துக்குள்  இரண்டாவது நூலான 'மழைப் பாடல்' வரப் போகிறது என்றார்.
சரிதான் ஜெயமோகனை ராட்சச எழுத்தாளர் என்று சொன்னது மெத்தச் சரி. இதனை யார் சொன்னது என்று யுவராஜனைக் கேட்டேன் அவர் கார்த்திகேசுதான் சொல்லியிருக்கிறார் என்றார் . இல்லை அதற்கு முன்னாலேயே தமிழ் நாட்டில் அந்தப் பெயரைச் சூட்டிவிட்டார்கள் எனபதற்கு ஆதாரமாகவே பத்திரிகைச் செய்தியில் ரெ.கா ஜொமோவை ' ஜெயமோகனை ராட்ச்ச எழுத்தாளர்' என்றே குறிப்பிடப் படுகிறார் என்றே எழுதியிருந்தார். அதுபற்றி யாராவது ஆய்வை மேற்கொள்ளவேண்டும்.
நான் ஜெமோவைக் கேட்டேன்..."எப்படி ஜே நாங்க படிக்கிற வேகத்த விட நீங்க எழுதிற வேகம் அதிகமா இருக்கு," என்றேன்.
அவர் சொன்னார்," டைப் அடித்து அடித்து என் விரல்களை ஒரு சில கணம் நீட்டி மடக்கக் கூட முடியாது  அவை செயலற்றுப் போயிருக்கும் "என்றார். என்னைப்போல எழுத்துச் சோம்பேறிகளுக்கு எதற்கு விரல்கள் என்று தோன்றியது.

ஜெ உங்கள் விரல்களின் நடனம் எங்களுக்கு அக வேள்வியைத் தூண்டிக்கொண்டே இருக்கிறது. எழுதுங்கள் ஜெ.
முனைவர் ரெ.கார்த்திகேசு

மறுநாள் ரெ.கார்த்திகேசு ஒருங்கிணைத்த சங்கப் பணிமனையில் பேச்சு. ஜொமோவை ரெ.காதான் விடுதியிலிருந்து நிகழ்ச்சி இடத்துக்கு அழைத்துக்கொண்டு போவதாகச் சொன்னார். நான் அவரின் தொடர்பு எண்ணையும், விடுதி முகவரியையும் கொடுத்திருந்தேன்.

தொடரும்...



 

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின