Skip to main content

17. காசிக்குப் போவது பாவம்தீர்க்கவா?

17.செருப்பு விற்ற பணம்     

    பூக்கோ சொல்வதுபோல மனிதன் மனிதனாக இல்லை. அவன் தன் சுயத்தைக் காணடித்துவிட்டான். அவனைச் சூழ்ந்துள்ள உலகமே அவனின் நம்பிக்கைகளை, நடத்தையை, போக்கைக் , கல்வியை, கட்டமைக்கிறது. இதை அவன் அறிவதில்லை. அந்தக் கட்டமைப்பிலிருந்து அவனால் எளிதில் வெளிவர முடியாது.  கடவுளின் மேல் அவன் வைக்கும் நம்பிக்கை இதற்கொரு நல்ல சான்று. அவன் முன்னோர்கள் எவ்வாறு நம்பிக்கை வைத்தார்களோ அதனையே சுற்றியுள்ள சமூகம் செய்கிறது. சூழ்ந்துள்ள சமூகப் போக்கின் நீட்சியாகவே இவனும்  அதனை அப்படியே தொடர்கிறான்.  நம் சமூகத்தின் கடவுள் நம்பிக்கையானது இப்படித்தான் கட்டமைக்கப் பட்டு , தனிமனிதன் வரை தகவமைத்துக்கொள்ளும்படியானது . மனிதன் சுயத்தைத் தேடினால்தான் பூக்கொ சொல்வது சரியில்ல என்றாகும். இது நடக்குமா? முந்தைய கட்டுரையில் நான் சொல்லி வந்த கடவுள் நம்பிக்கைக்கும் கோட்பாட்டாளர் பூக்கொ சொன்னதையும் ஒப்பீடு செய்து பார்க்கலாம்.
சந்து வழியாக நடைப்பயணம்

    காசி விஸ்வநாதர் கோயிலின் உள்ளே இருந்து வெளியாவது பெரிய சிக்கலாகி விட்டது. ஒவ்வொரு சிலையையும் நகர்ந்துகொண்டேதான் பார்க்கவேண்டும். நிற்பவரை காவலர் (போலிஸ்) மிரட்டுகிறான். போ போ என்று தள்ளிக்கொண்டே இருக்கிறான். அவர்கள் கறாராகத்தான் இருக்கிறார்கள். பெரும் கூட்ட நெருக்கடியைச் சமாளிக்கும் சிரமம் செய்து பார்த்தால் மட்டுமே புரியும். சாமியைக் கும்பிட்ட மாதிரியே இல்லை. இடிப்பவர் மேலும், தள்ளுபவர் மேலும், ஏசுபவர் மேலுமே கவனம் போய்க்கொண்டிருந்தது.

        ஒரு வழியாய் வெளியே வந்தாயிற்று. ஆனால் எங்கள் குழுவில் ஓரிருவர் மட்டுமே இருந்தார்கள். மற்றவர்கள் வெளியேறிவிட்டார்களா? உள்ளேயே சிக்கிக் கொண்டு விட்டார்களா என்பது மர்மமாகவே இருந்தது. காலணி வைக்கும் இடத்திற்கு வந்தால் அங்கே சிலர் இருந்தனர். சிலர் அறிவிப்புகளை , கட்டளைகளைக் காது கொடுத்து கேட்பதுமில்லை. பராக்கு பார்க்க வந்தவர்கள் காதைத் தொலைத்து விடுவார்கள் போலும்.
காசியில் வேதம் பயிலும் மாணவர்கள்

       எல்லாரும் சேர்ந்தவுடன் அதே சந்தில்  நடந்து வந்துகொண்டிருந்தோம். இரு பக்கமுமுள்ள குடியிருப்புப் பகுதிகள் நெருக்கமாக இருப்பதைபார்க்கும்போது மக்கள் நெருக்கடியைப் புரிந்துகொள்ள முடியும். கூடுதலாக சுற்றுப்பயணிகள் வேறு. பாதையோ தூய்மையற்று இருக்கிறது.  அதே சந்தில் மூன்று நான்கு இடத்தில் மாடுகளை கட்டிப் போட்டிருந்தார்கள். எங்கள் குழு நடந்து கொண்டிருக்கும்போதே ஒரு மாடு மூத்திரம் அடித்தது. மாடு மூத்திரம் பெய்தால் குறைந்தது ஆறடி தூரத்துக்காவது சிதறும். என் குழுவில் இருந்த ஒருவர் அந்த மாட்டைத் தாண்டிச்செல்லும் தருணத்தில் அது சிறுநீர்(பெருநீர்) அடிக்கத் துவங்கியது.

அவர் அதனைத் தாண்டவும் முடியாமல் பின்னகரவும் முடியாமால் தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தார். மூத்திரச் சிதறல்கள் அவர் மேல் அபிஷேகமாயிற்று. அது சற்று பள்ளமான பாதையாகையால் மூத்திர நீர் முன்னால் நடப்பவரையும் விரைந்து துரத்த ஆரம்பித்தது. பலரில் கால்கள் அதில் பட்டுவிடக்கூடாது என்று முயற்சி செய்தார்கள். ஆனால் எல்லாருமே பலியானார்கள். காலணி பாதங்களில் சாணமும் மூத்திரமும் உறவு வைத்துக்கொண்டது. கால்களைக் கழுவ நீரை எங்கே தேடுவது அப்படியே பேருந்தில் ஏறிக்கொண்டோம். அதே சந்தில் ஒரு பசுமாடு நடந்து கொண்டிருக்கும் கூட்டத்தை நோக்கி ஓடியது. கவனமாக இருந்திருக்காவிட்டால் முட்டியும் இருக்கும்.
எங்களுக்கு வழிகாட்ட தன்னைதானே நியமித்துக் கொண்ட பையனுக்கு கையில் ரூபாயைக் கொடுத்து கொஞ்சம் மகிழ்ச்சியை வாங்கிக்கொண்டோம்.
வழிகாட்டிப் பையன்

வரணாசியில் சுத்தமான இடமே இல்லையென்று சொல்லிவிடமுடியாது. இந்து பானாரஸ் பல்கலைக்கழகம் அதனை ஒட்டிய பசுபதி நாதர் கோயிலும்தான் காசிக்கு திருஷ்டிப் பரிகாரமாய் அமைந்த இடங்கள்.

 பானாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை நிறுவியவரின் அடையாளப் பலகைதான் நீங்கள் கீழே பார்ப்பது. மதன் மோகன் மளாவியா  என்றவரே இப்பல்கலைக் கழகத்தை நிறுவ பட்ட சிரமத்தை சரத் சொல்லும்போது நமக்கு வியப்பளிக்கிறது. ஒருமுறை பெங்கலூர் ராஜாவிடம் நன்கொடைக்கு அணுகியிருக்கிறார். சம்ஸ்கிருதத்தை வேதபாடங்களையும் போதிக்கும் இந்த உயர் கல்வி நிலையம் நிறுவப் படுவதில் அவருக்கு உடன்பாடு கிடையாது. அதனால் அவர் தான் அணிந்த செருப்புகளை நன்கொடையாகக் கொடுத்தாராம். மதன் மோகன் அக்காலணிகளை பாலிஷ் செய்து இவை பெங்கலூர் ராஜாவின் காலணிகள் இப்போது விற்பனைக்கு உள்ளது என்று விளம்பரம் கொடுத்திருகிறார். அவை நல்ல வைலைக்கு வாங்கப் பட்டனவாம். இப்பல்கலைக்கழகம் அமையவும் கால்ணிகூட உதவியாக இருந்தது இங்குள்ள கடவுள் நம்பிக்கைக்கு எவ்வளவு முரணானது என்று கவனிக்கத் தக்கது. இன்றைக்கு இது இந்தியாவிலேயே மிகப்பெரிய பல்கலையாக வளர்ந்திருக்கிறது.
    

பசுபதி நாதர் கோயில்

நானும் என் மனைவியும் பசுபதி நாதர் கோயிலின் வாசலில்.

தொடரும்...

Comments

காசி பயணம் செல்லும் உத்தேசம்
எனக்கிருக்கிறது
தங்கள் பதிவு காசி குறித்து மிகச் சரியாகப்
புரிந்து கொள்ள மிகவும் உதவியாக இருக்கிறது
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
ko.punniavan said…
வருகைக்கு நன்றி ரமணி. இந்து சமய விழுமியங்கள் நிறைந்த இடம் வாரணாசி.
இவ்வளவு செலவு செய்து போலிஸ் தள்ளுவதையும் வாங்கிக் கொள்ள வேண்டுமா? அடுத்தவரை தொடுவது தவறாயிற்றே. புகார் கொடுக்க முடியாதா?

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த