Skip to main content

காசிக்குப்போவது பாவம் தீர்க்கவா?

3. ரயில் பயணம்


                                                  சுற்றுப் பயண வழிகாட்டி சரத்


ஏர் ஆசியா போன்ற கருமித்தனமிக்க சேவைகள் போலல்லாமல் மாஸ் விமானம் தாராளமான வசதிகள், சேவைகள் செய்து தருகிறது. நல்ல அகலமான இருக்கைகள், கால் நீட்டி சாய்ந்துகொள்ள போதுமான இடம், அமர்ந்துவுடன் நம் இருக்கைக்கு முன்னால் அமைக்கப்பட்ட தொலைக்காட்சி, அதில் விரும்பித் தேர்வு செய்துகொள்ள நிகழ்ச்சிகள் என உல்லாச பயணத்துக்கான முகமன் செய்து தருகிறது.

அமர்ந்த சற்று நேரத்தில்  பொறித்த நிலக்கடலையும், ஆரஞ்சு ஆப்பில் ஜூஸ் கொடுக்கிறார்கள். சற்றுநேரத்தில் தேநீர் காப்பி வருகிறது. பியர், விஸ்கி, வைனும் பரிமாறுகிறார்கள். பின்னர் இரவு உணவு, பிரியாணி, தேங்காய்ச் சோறு கொடுக்கிறார்கள். பியர் விஸ்கி மீண்டும் கேட்டால் கிடைக்கிறது. கட்டணமில்லை. இந்தியர்களுக்கு இந்தச் சேவை எவ்வளவு குதூகலத்தை அளிக்கும் என்று எண்ணிப்பாருங்கள். கூச்சப் படாமல் மீண்டும் பீரும் விஸ்கியும் கேட்டுப் பெறுகிறார்கள்.






ஆனால் ஏர் ஆசியா விமானத்தில் இவற்றையெல்லாம் பணம் கொடுத்தால்தான் கிடைக்கும். நம்முடைய பயணப்பைகள் 15 கிலோ சுமைக்கு மேல் அனுப்பினால், கிராம் கணக்கு ஏறினாலும் கட்டணம் விகித்து விடுவார்கள். கறார் நிறுவனம். மாஸ் விமானத்தில் 30 கிலோ வரைக்கும் ஏற்றலாம். சிறு தொழில் செய்பவர்கள் இந்தியாவிலிருந்து வணிகப் பொருட்கள் கொண்டுவர இந்த 30 கிலோ  எடை பெரும் உதவி செய்யும்.

இப்படியெல்லாம் தாராளமாக வசதிகள் செய்து தரும் மாஸ் ஒவ்வொரு ஆண்டும் நட்டக் கணக்கு காட்டுகிறது பாவம். ஆனால் ஏர் ஆசிய உரிமையாளர் டோனி பெர்னாண்டஸ் மலேசியாவின் 10 பெரும் பணக்காரர்களில் ஒருவர்.  ஏன் ஆக முடியாதுன்ன? தொட்டதுக்கெல்லாம்
பணம் தரணும்னு கறார இருந்தா ஏன் கோடிஸ்வரனா ஆக முடியாதுன்ன?
                                    .................................................

கிட்டதட்ட மாலை ஏழு மணிக்குக் கிளம்பிய விமானம் மறுநாள் ஆறரை மணிக்கு டில்லியை அடைந்தது. சுங்கத்துறை பரிசோதனை முடிந்த வெளியேற எங்கள் சுற்றுப் பயணி வழிகாட்டி சரத் வெளியே பெயர்ப் பலகையோடு
காத்திருந்தார்.

விடுதி அறையை அடைந்ததும் காலை உணவு தயாராக இருந்தது. அறைகள் கிடைத்தவுடன் கொஞ்ச நேரம் ஓய்வு. மதியம் 2 மணிக்கு ரயில் வழி
பஞ்சாப் பயணம். பகலுணவை முடித்துக் கொண்டு டில்லி ரயில் நிலையத்துக்குப் பயணமானோம். பயண நிறுவனம் ஏறகனவே ரயில் டிக்கெட்டுகளை பெற்றுவிட்டிருந்தது. இந்தியாவில் முன்னாலேயே டிக்கெட்டுகள் வாங்கிவிடவேண்டும்.

ஒருமுறை தமிழ் நாட்டு சேலத்திலிருந்து சென்னை வருவதற்கு கடசி நேரத்தில்  டிக்கெட் பெற முயன்றும் முடியாமல் குறித்த நேரத்தில்
சென்னையை அடைய முடியாமல் அவதியுற நேரிட்டது. எனவேதான் இந்த முன்னேற்பாடு. இந்தியா மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு. இங்கே
ரயில் பயணம் ஏதுவானது என்றாலும் எப்போதுமே ஜன்க் கூட்டமும், பரப்ரப்பும் மிகுந்திருக்கும்.

ரயில் நிலையத்தை அடைந்ததும் சுமை தூக்கும் போர்ட்டர்கள் ஓடோடி வருகிறார்கள். ஒரே நேரத்தில் தலையிலும் தோளிலும் கைகளிலும் நான்கைந்து பேரின் பயணப்பைகளை சுமந்து கொண்டு நாம் பயணம் செய்யும்
பிலாட் பாரத்துக்கு கொண்டு செல்கிறார்கள். ரயிலில் ஏற்றும் வரை வேலைகளை முடிக்கிறார்கள். ஒரு முறைக்கு எங்களிடம் நூற்றைம்பது ரூபாய் கட்டணம் வாங்கினார் வழிகாட்டி.படிகளில் ஏறி இறங்கி சுமைகளை சுமந்து செல்வது நம்மால் முடியாத காரியம்.

டில்லி ரயில் நிலையம் இந்தியா முழுதும் ஓடும் தண்டவாளத்தை இணக்கும் மிக முக்கிய ரயில் நிலையம். ஏழெட்டு தண்டவாளங்கள்  அடுத்தடுத்து காணலாம். மேற்கும், கிழக்கும், வடக்கும், தெற்கும் ஓடும் ரயில்கள் மூச்சு வாங்க அங்கேதான் ஓய்வெடுக்கும். கைரேகைகள் போன்ற குழப்பமான ரயில் கோடுகளைப் பார்க்கத் தலை சுற்றும்.









                             ரயிலில் மோப்ப நாய்கள் கொண்டு நடக்கும் பரிசோதனை

முட்டை மூட்டையாக ஏற்றுமதிப் பொருட்கள் பிலாட் பாரத்தில் நிறைந்திருக்கும். இரவை கழித்த பயணிகள் பிலாட் பாரத்தில் தூங்கி வழிவதைப் பார்க்கலாம். குடும்பம் குடும்பமாகக் கூடத் தூங்குவார்கள். மக்கள் நடமாட்டம் மலிந்து காணப்படும். எல்லாவற்றையும் தூக்கி விழுங்கும் வகையில் மூத்திர நெடி சதா சர்வ நேரமும் வீசிக்கொண்டேஇருக்கும்.எப்போது ரயில் வரும், எப்போது கிளம்பலாம் என்றிருக்கும். மூத்திர நெடி ஒவ்வொரு நிலையத்திலும் விரட்டிக்கொண்டே
இருக்கும்.

மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் போலிஸ் பாதுகாப்பும், பரிசோதனையும் நடந்தபடியே இருக்கிறது. நாங்கள் ரயிலில்பயணம் செய்யும் ஒவ்வொரு முறையும் இந்தப் பரிசோதனை நடந்தது. இந்தியாவில் பாகிஸ்தானிய தீவிரவாதிகள் ஊடுருவல் அதிகம். எங்கே எப்பாது குண்டு வெடிக்கும் என்று சொல்லமுடியாது.

பிச்சைக் காரர்கள், சிறு வியாபாரிகள்,  சுமை தூக்கும் கூலிகள் எப்போதும் நம்மைத் துரத்திய்படியே இருப்பார்கள். நமக்கும் ஹிந்திமொழி தெரியும் என்றே நினைக்கிறார்கள். நமக்குத்தான் இந்திய முகமாயிற்றே.கேரளா போனால் மலையாளமும்,ஆந்திரா போனால தெலுங்கும், கர்நாடகம் போனால் கன்னடமும் மக்கள் நம்மிடம் பேசுவது போலவே வட நாட்டில் ஒரேஹிந்தி மயம். எல்லாவற்றுக்கும் சரத்தின் மொழிபெயர்ப்பு தேவைப் பட்டது. ஆங்கில தெரிந்தவர் சொற்பமே. இன்னும் கால் நூற்றாண்டில் ஆங்கில மொழிப் பிரயோகம் அங்கே நிலை கொண்டிருக்கும். ஆங்கிலக் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கும் நாடு இந்தியா.



 

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின