Skip to main content

9. சீனப் பெருஞ்சுரை நோக்கி ஒரு பயணம்



மறுநாள் சீனப் பெருஞ்சுவரை நேரில் காணும் ஆவலில் இருந்தோம்.குறிப்பாக என் மனைவி அதனைப் பார்த்தே ஆகவேண்டும் என்றே சீனாவுக்கு வந்தார். ஒரு உலக அதிசயத்தை இரு முறை பார்த்தாகிவிட்டது- ஆக்ராவில் உள்ள மும்தாஜுக்காக ஷாஜாஹான் கட்டிய காதல் மாளிகை. இரண்டாவதாக இந்தச் சீனப் பெருஞ்சுவர். "சாவறதுக்குமுன்ன இன்னும் அஞ்சையும் பாத்திரனும்" என்று சொல்லிக் கொண்டே இருப்பார். (அப்போ இன்னும் மொய் அதிகம் இருக்குன்னு சொல்லு)

                                                      பாதையை ஒட்டிய உறைந்த கால்வாய்

                                       பெருஞ்சுவருக்கு இடையிடையே குகை மாதிரியான அறை






" வா...... காச வச்சி ன்னா பண்ணுறது?"

அன்று சேவல் கூவும் நேரம் வரைக் காத்திருக்க வேண்டாம். மாலை நான்கு மணிக்கு மேல் அங்கே இருக்க முடியாது. குளிர் மட்டுமல்ல சாலையும் வழுக்கலானது.  இரவெல்லாம் பனி கொட்டி லில்வெயிலுக்கு உருகி வாகனங்களை வழுக்கித்தள்ள காத்திருக்கும் நெடுஞ்சாலை. என்வே காலையில் சீக்கிரம் கிளம்பிவிடவேண்டும் என்று எச்சரித்தார் மைக்கல். நாங்கள் சென்ற பாதை இடது கைப்பக்கம் எத்தனையோ கிலோமீட்டருக்கு  விவசாய நிலங்களுக்கு நீர்ப் பாசண வசதிக்காக  அகன்ற கால்வாயை வெட்டி இருக்கிறார்கள். அது முழுவதுமாய் உறைந்து போய்க்கிடக்கிறது.

இதே மாதிரி நிலத்தோற்றத்தை நாங்கள் வட இந்தியாவில் சிக்கிம்மிலிருந்து டார்ஜீலிங்குக்குக் பஜிரோவில் போகும் போது பார்த்தோம். அதுதான் கங்கை நதி என்று சொன்னார்கள். சீனப்பெருஞ்சுவருக்குச் செல்லும் பாதை குறுகலாக இருந்தாலும் குண்டு குழி இல்லாமல் சமமாக இருந்தது. ஆனாலும் நேர்த்தியான் அழகு. ஆனால் டார்ஜீலிங்குக்குப் போகும் பாதை வலைந்து நெளிந்து செல்கிறது. கீழே சாலையை ஒட்டியே சரிந்து கங்கை சடசடத்து ஓடுகிறது. பஜீரோவிலிருந்து கீழே பார்க்கும்போது பயங்கரமாக இருக்கிறது. இழை பிசகினாலும் கங்கையில் புனித நீராட்டம் நடந்து விடும். வாகன
 ஓட்டுனர்களோ அடுத்த பயணத்துக்காக....பணத்துக்காக கண்மண் தெரியாமல் செலுத்துவது உயிரைக் கையில் பிடித்தும் புண்ணியமில்லை என்ற சமிக்ஞையின் பயணமாக ஆக்கி விடுவார்கள். ஆனால் இன்றைக்கும் அந்த இயற்கை வனப்பின்  நினைவு நெஞ்சை அள்ளிச் செல்கிறது. இயற்கையின் அழகிய தரிசனம் அது. வலது பக்கம் அடர்ந்த காடும் தேயிலைத் தோட்டங்களும், இடது பக்கம் வெண்மை நீர் அனாமாய்ப் பாடும் தாலாட்டும் ... அடேயப்பா....  கங்கைக் கரையை ஒட்டிய கிரமங்களும்-.......அது ஒரு கனாக் காலம் போங்கள்!









இங்கே சீனாவில் பனிக்காலம்தான் அழகு. ஆனால் அந்த நீரோடை மனிதர்களால் வெட்டப் பட்டதால் அதனின் இயற்கை வனப்பைப் பார்க்கமுடியவில்லை. மிக நேர்த்தி. இரு பக்கமும் கரை உடையாமல் இருக்க பலத்த சுவர் எழுப்பி இருக்கிறார்கள்.  ஆற்றின் அகலம் அத்தனை தூரத்துக்கும் ஒரே அளவு. பனிக்காலமாகையில் பச்சை நிறத்தை பார்க்க முடியவில்லை. நீர் நிறைந்த இடம் எப்போது சொல்லொனா அழகு தெரியுங்களா? ஆற்றோரங்களில் பச்சைப்பிடித்து பரந்து நிற்கும் போதுதான். அதன் நாணல் நீரில் தலை நனைத்து நெகிழ்ந்தாடும் போதுதான். செடிகொடிகள் ஆற்றின் பக்கம் தலை சாய்த்து முகம் பார்த்துக் கொள்ளும் போதுதான்!

"ஆறுன்னா அது சுழித்து ஓடணும். இப்படி நம்மல பராக்கு பாத்துக்கிட்டு ஒறஞ்சி போய் நிக்கக்கூடாது! என்னா வராதவங்களா வந்துட்டாங்க.. இப்படி வாயப் பாத்துக்கிட்டு நிக்கிறதக்கு!ம்!"

வாகனத்தில் பயணம் செய்யும் போது கால்வாயைப் பார்ப்பதற்கு அழகாககத்தான் இருந்தது.

பயண  நேரத்தில் மைக்கலைப் பேசவிடக்கூடாது( அறுத்து தள்ளிடுவாருல்ல) எனவே நாங்கள் கேள்வி கேட்கத் தொடங்கி விட்டோம்.

சீன ஜனத்தொகையை எப்படி கட்டுப்படுத்திக் கொண்டு வந்தார்கள்? 
அது ஒரு சோகக்கதைதாதான். ஒரு பெற்றோர் ஆசைக்கும் ஆஸ்திக்கும் ஒன்றே ஒன்றுதான் பெற்றுக் கொள்ளவேண்டும். மிகக் கடுமையான சட்டம் இது! இன்னொன்றைப் பெற்றுக்கொள்ள நேரிட்டால் அதற்காகத் ஒரு குறிப்பிட்ட தொகையைத் தண்டம் கட்டவேண்டும். பணம் இல்லாதவர்கள் கதி? அவர்கள் வீட்டில் எனென்ன உடமைகள் இருக்கின்றனவோ எல்லாம் அரசால்  அபகரிக்கப் பட்டுவிடும். அது பழைய சைக்கிலோ, தொலைக்காட்ட்சிப் பெட்டியோ எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு நிராயுதபாணியாய் விட்டுச் சென்று விடுவார்கள்!

சாலை விதிகளை அப்படியே சிங்கப்புரைக் காப்பியடித்திருக்கிறார்கள். சாலை விதி மீறல்களெல்லாம் அப்படியே கேமரா படம் எடுத்து விடும். ஒரு குறிப்பிட்ட புள்ளிகள் அவற்றுக்கு தண்டனையாக உங்கள் பேரில் பதிவாகும். புள்ளிகள் அரசு சட்டம் விதித்துள்ள எல்லையை மீறினால் லைசன்ஸ் பறிக்கப் பட்டுவிடும். அப்புறம் நட ராஜான். அல்லது பொதுப் போக்குவரத்துதான்.

நாம் நாட்டில் பாருங்கள் எவ்வளவு அறிவுப் பூர்வமாய் சட்டங்களைக் கண்டு பிடிக்கிறார்கள். சட்டத்துக்குப் புறம்பாக மோட்டர் சைக்கில் ரேஸ் ஓடும் பித்தர்களுக்கு, அவர்கள் ரேஸ் ஓட பிரத்தியேகமாக ஒரு ரேஸ் தளத்தைச்  அமைத்துத் தரலாம் என்றார்கள். என்ன ஒழுங்கு இது? பிறருக்கும் ஆபத்தை விளைவிக்கும் செயல் இது என்பதால் அவர்களே முட்டி மோதி சாகட்டும் என்ற 'கரிசனமா' இது?  பிடித்துச் சிறையில் போட வக்கில்லாதவர்கள் .பேச்சுதானே இது? அவர்கள் மலாய்க்கார இளைஞர்கள் என்பதால் இந்த சலுகை. அய்யா சலுகை தருவதிலும்  அறிவார்ந்து இயங்க வேண்டாமா?

நாட்ட என்னா கதிக்கு கொண்டாரப் போறானுங்களோ?

வாகனம் அப்போது பெருஞ்சுவரைநெருங்கிவிட்டிருந்தது. மலை உச்சியில் அது மலைப் பாம்பைப்போல நெளிந்துஓடுகிறது. 

அதோ... அதோ... தெ கிரேட் வோல்.... என்றார்கள் பொடிசுகள்!


 


Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின