Skip to main content

6. சீனப் பெருஞ்சுவரை நோக்கி ஒரு பயணம்



  சீனர்கள் ஒலிம்பிக் விளையாட்டுகளில் தங்கங்களை குவிப்பதற்குக்

காரணம் தேடுபவர்கள் முதல் நாளில் நாங்கள் பார்த்த அக்ரோபேட்டிக்

விளையாடுகளைப் பார்த்தாலே புலனாகிவிடும்!

   இரண்டு கைகளாலும் இரண்டில் தொடங்கி  20 பந்துகளை விடாமல் வீசிப்

பிடிக்கும் சாகசமும் சரி, ஒற்றை சக்கர வண்டியில் கம்பிமேல் பலவித

சாகசங்களை செய்து காட்டிய விளையாட்டிலும் சரி பார்ப்பவரை கண்சிமிட்ட

விடாது, பிரக்ஞை பிறழ விடாது அப்படியே சிலையாய் பிடித்து வைத்து

விடுகிறது. ஒரு மந்திரக்கோலின் அசைவுக்கு கட்டுப்பட்டதுபோல

பார்வையாளர்கள் நிலைகுத்திய பார்வையிலிருந்து விலகவில்லை! ஒருவன்

ஒற்றைச் சக்கர சைக்கிலில் சாகசம் செய்யும்போது நம் உயிர் நம் கையில்

இல்லை. நாம் விழுந்து தெறித்துவிடுவோமோ என்ற அச்சம் உடலில்

எறும்புபோல ஊடுருவிய வண்ணமே உள்ளது.



    ஐநூறு பேருக்கும் மேல் கூடியிருந்த கூட்டத்தை என் ஒரு வயது பேரனின்

செய்கையும் சிரிக்கவைத்து விட்டது. ஒரு சாகச நிகழ்வு முடிந்த இன்னொஉரு சாகச நிகழ்வுக்கு இடையில்   ஒரு 20

வினாடிக்கு விளக்கு அணைக்கப் படுகிறது. இருள் சூழ்ந்ததும் அவன் ஒரு

அதிருப்தி கூச்சல் போடுவான். அவ்வொரு முறையும் அதே போன்ற சிறு

சலனம். அவர்கள் சாகசத்தை இடைவிடாது பார்க்கவேண்டும் என்ற துடிப்பே

அவனை கூச்சலிட வைத்தது. அவன் கூச்சலிடவும் வெளிச்சம் விழுந்து

அடுத்த சாகசம் ஆரம்பிக்கவும்  சரியாக இருந்தது. நிசப்தம் நிலவும் அந்தத் 

தருணத்தில் அவனின் குரலொலி சமிக்ஞை நமக்கு மேலுமொரு 'சாகச

நிகழ்வாகவே' பட்டது.

சாகசங்கள் அவ்வளவு நுட்பமாகவும் அத்துணை

நேர்த்தியாகவும் இருந்தது. வண்ண ஆடையில் இளம்பெண்களும் ஆண்களும்

தங்கள் உடலசைவுகளைக்கூட கலை நேர்த்தியோடு செய்யும் போது.. 'அடடே"

என்று வியப்பு வார்த்தைகள் நம்மிடமிருந்து கசியும். அவ்வளவு ஒழுங்கு,

இழை பிசகாத செய்நேர்த்தி!


அவ்வளவும் நெடுங்காலப் பயிற்சியும், உழைப்பும், வலியைத்

தாங்கிக்கொள்ளும் சக்தியும் அவர்களை இந்த முழுமையை நோக்கி

உயர்த்தியிருக்கிறது. இதுபோன்றன் நிகழ்வுகள உலக மக்களை ஈர்த்தும் இருக்கிறது. The chinese- really mean  business.

ஆம்,இடைவிடாத பயிற்சி, தேச பக்தி, இனப் பற்று.. உலக நாடுகளை

அனைத்தையும் வென்று  ஈடு இணையற்றுத் திகழ வேண்டுமென்ற வெறியை

நான் சீனர்களிடம் பார்த்தேன்.

அது ஒரு கம்னியூஸ்ட் நாடாக இருந்து பின்னர் அதிலிருந்து

விடுபட்டு, பொருளையலிலும், வணிகத்திலும், தற்காப்பிலும்

அந்நாடு காட்டும் முன்னேற்றம், இரண்டாம்

உலக யுத்தத்துக்குப் பிறகு ஜப்பான் முனேறியதை விடப் பன்மடங்கு

அதிகமாகும்.

சரி, அதை விடுங்கள்..


நிகழ்வு முடிந்து வெளியே வந்த போது இருட்டிவிட்டிருந்தது. கடிகாரத்தைப்

பார்த்தேன் மணி ஐந்து. அதாவது இரவு மணி ஐந்து. இங்கூயும் ஒரு முரண். நம்

நாட்டில் வெயில் மேற்கில் இறங்கும் நேரம் ஆனாலும் அதன் தகிப்பு

குறைந்திருக்காது. மாலை 5.00 நமக்கு.


மண்டபத்துக்கு வெளியே குளிர் கூடியிருந்தது. குளிர் மைனஸ் 10ஆகப்

பதிவாகியிருக்கிறது. மண்டபத்தின் உள்ளே சூடேற்றி இருந்தபடியால்

வெளியே 'கனன்றுகொண்டிருந்த' குளிர் தெரியவில்லை. வெளியே

வந்தவுடனே காற்று நம் மேல் குளிரின் உக்கிரத்தைப் பூசியபடி இருக்கிறது.


உடனே குழந்தைகளை ஒன்று சேர்த்து வேனுக்கு ஓடினோம். வேன்

இத்தனைக்கு 100 மீட்டருக்கு அப்பால்தான் இருந்தது.


ஹோட்டலுக்கு வந்ததும், பசி எடுத்தது. இந்தக்குளிரில் மீண்டும்

கடைத்தெருவுக்குள் இறங்க முடியாது. குஞ்சு குலுவானெல்லாம் தாங்காது

என்பதல்ல, எங்களால் கண்டிப்பாய் முடியாது.


என் மகன்களும் மருமகனும் போய் உணவு வாங்கி வந்தனர். கொய்த்தியோ,

பிரட்டிய சோறெல்லாம் அதிக விலை கொடுத்து வாங்கி வந்தார்கள். ஒரு

ஆள் உணவு கிட்டதட்ட 15 ரிங்கிட். சீனச் செலவாணிக்கு முப்பது யுவான்.

நம்முடைய பணத்துக்கு அங்கே இரட்டிப்பு  மதிப்பு. ஆனால் விலைவாசியோ

விஷமாய் கிடக்கிறது.


மறுநாள், முன்னர் ஆண்ட ராஜ அரண்மனைக்குப் போவதாய்த் திட்டம்.

சீனப்பெருஞ்சுவரை கட்டி, உலக அதிசயங்களில் ஒன்றாக்கப் பட்ட அரச

பரம்பரை வாழ்ந்த அரண்மனைகள் அவை. மிங் என்ற கடைசி அரச

பரம்பரையோடு, (மிங்  டினாஸ்டி) ஆட்சி நிறைவு பெற்றிருக்கிறது...ஒரு

மாபெரும் புரட்சியின் வழியே.



தொடர்ந்து பார்ப்போம்.....(படங்கள் அடுத்த தொடரில்.. சில தொழில் நுட்பச் சிக்கல்)

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின