Skip to main content

3.சீனப் பெருஞ்சுவர்



உள்ளபடியே நாங்கள் கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் நகருக்குக் கிளம்பிய போது மாலை மணி 6.30. காலை மணி11.00 அல்ல. முன்னர் சொன்னது தவறு. பெய்ஜிங் மாநகரின் விமான நிலையத்தை வந்தடைந்தபோது நள்ளிரவைத்தாண்டி விட்டிருந்தது. இரவு மணி 1.00 இருக்கலாம். மலேசியாவுக்கும் சீனாவுக்கும் நேர வித்தியாசம் ஒரு 15 நிமிடங்கள்தான். அங்குள்ள கடிகார கணக்குப்படி. அது ஒன்றும் பெரிய வித்தியா.லேசியக் கடிகார நேரம்தான் அங்கேயும்.

விமானத்தில் இரவு உணவு கொடுத்தார்கள். முன்கட்டணம் வசூலித்த பணத்தில்தான். பரவாயில்லை பசிக்கு இறங்கும் சுவைதான்.
வந்திறங்கியதும் பசி வயிற்றைக் கிள்ளியது. எங்களின் சுற்றுப்பயண வழிகாட்டி தன்னை மைக்கல் என்று அறிமுகப் படுத்திக் கொண்டான். வெளியே இரண்டு மணி நேரம் காத்திருந்ததாகச் சொன்னார். சற்றும் தாமதிக்காமல் மெரியோட் 5 நட்சத்திர விடுதிக்கு ஒரு வேனில் அழைத்துச் சென்றார். விமான  நிலையத்திலிருந்து ஒன்றரை மணி நேர ஓட்டம். பெய்ஜிங் மாநகரம் ஒளி வெள்ளத்தில் பூத்திருந்தது. பனி கொட்டிக்கொண்டிருந்தது. விமானத் தளத்தின் வாசலிலிருந்து வேன் வந்து நின்ற இடத்துக்கு ஒரு மூன்று நிமிட நேர நடைதான். அந்த மூன்று நிமிட நேரத்தில், முழுதாய் மூடிக்கொண்டிருந்த எங்களாலேயே குளிரைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை! சில்லிட்ட காற்று முகத்தில் அறைந்தபோது முகம் உறிந்துவிட்டது. நல்ல வேளையாக வேனில் ஹீட்டர் இருந்ததால் சமாளிக்க முடிந்தது. வெளியே அந்த அதிகாலை வேளையில் குளிர் -12 ஐ அடைந்திருந்தது என்று சொன்னார் மைக்கல்.

வெளியே சில இடங்களில் பனி உறைந்து வெள்ளைச் சால்வைபோலப் படர்ந்திருந்திருந்தது. பிள்ளைகள் பனியைக் கண்டதும் குதூகளித்துக் குதித்தார்கள்.

பனிவெளிதானே (பனிப்பொழிவுதான்) மலேசியாவுக்கும் சீனாவுக்குமான பெரிய இடைவெளி! குளிரை உணர்வதுகூட உல்லாசப்பயணத்தில் ஒரு நோக்கம்தானே! ஒரு நோக்கம் என்று சொல்வதைவிட முக்கிய நோக்கம் அல்லவா! பருமாற்றம்தானே ஒரு நாட்டைப் பிறிதொரு நாட்டினின்றும் வேறொன்றாய்க் காட்டுகிறது. மக்களின் வாழும் சூழல், கலாச்சாரம், பழக்க வழக்கம், மண்ணின் தோற்றம் என்ற அக புற வாழ்வின் வித்தியாசங்களை  மையமிட்டுக் காட்டும் போதுதானே ஒரு இடம் நம்மை வசீகரம் செய்கிறத்!  ஆண்டு முழுதும் கிட்டதட்ட ஒரே மாதிரி சீதோஷ்ணத்தைக் கொண்ட மலேசியாவிலிருந்து, நான்கு வெவ்வேறு சிதோஷ்ண மாற்றத்தைக் காணும் சீனா போன்ற நாடுகளுக்குப் பயணம் போவது இந்த வித்தியாச தருணத்தை அனுபவிக்கத்தானே!

விடுதியைப் போய்ச்சேரவும், நான்கு அறைகளின் சாவிகளைப் பெற்றுக்கொண்டு அறைக்கு சென்றடையும் போது மணி மூன்றாகிவிட்டது. மறுநாள் காலை பதினோரு மணிக்கு வேன் வெளியே காத்திருக்கும் என்று சொன்னார் மைக்கல். விடுதியில் காலை பதினோருவரை பசியாறும் நேரம் என்றும் மைக்கல் சொன்னது கொஞ்சம் நிம்மதியாகத் தூங்கலாம் என்று நிம்மதிப் பெருமூச்சு விட வைத்தது!









நாளை பகலில் சீன தேசத்தைப் பார்க்கப் போகும் ஆவலோடு படுக்கைக்குச் சென்றேன்.

Comments

PUNNIAVAN said…
ச்சீனா போன அந்த பழைய அனுபவத்தை மீண்டும் எனக்கு தருகிறீகள்...
அடுத்தக் கட்டுரை படிக்க வேண்டும்.
-செபஸ்தியன்
Anonymous said…
அருமையான பயணக் கட்டுரை..பாகம் 4.. எப்பொழுது தரப்போகிறீர்கள்..நகைச்சுவையாக எழுதி படிக்க ஈர்த்து விடுகிறீர்கள்...waiting for part 4
Unknown said…
அருமையான பயணக்கட்டுரை...நகைச்சுவை உணர்வோடு தாங்கள் கூறுவது படிக்கத் தூண்டுகிறது.... waiting for part 4
இதுவரையில் போகாத இடத்திற்கு எங்களை அழைத்துச்செல்கிறீர்கள் சார்.தொடருங்கள்.... அருமை.
ko.punniavan said…
நன்றி விஜி,
சில சமயம் சோர்வு தட்டுகிறது விஜி.நான் ஊடகங்களில் எழுதி எழுதி வந்த களைப்பு இது.இருந்தாலும் உங்களைப் போன்றவர் தரும் ஊக்கம் எழுதச் சொல்கிறது.
தொடர்வேன்.
ko.punniavan said…
நன்றி முனியாண்டி ராஜ்,
உங்களுக்காகக் கண்டிப்பாய்த் தொடர்வேன்.

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த