ஜெய்ப்பூர் அரண்மனை பிங்க் சிட்டி அடுத்து நாம் காணவிருக்கும் வானவியல் சார்ந்த அரசரின் கருவிகள் வேல்ஸ் இளவரசரை நையாண்டி செய்த ஜெய்ப்பூர் மன்னர் புதிய கோட்டையில் முதலில் பிங்க் சிட்டியைப் பார்க்கலாமென்றார் மனோஜ். வண்ணத்தை சிவப்பு வண்ணத்தில் மஞ்சல் வண்ணத்தைக் கலந்தால் உண்டாகும் வண்ணம் பிங்க் என்று சொன்னால் சரியாக இருக்கும். அரண்மனை வளாகத்துக்குள் நுழைவதற்கு முன் உள்ள கட்டடம் முழுவதும் மேற்சொன்ன வண்ணத்தைப் பூசி இருக்கிறார்கள். அந்த இடம் முழுதும் பிங் வண்ணமயமாக இருக்கிறது. இப்போது கொஞ்சம் மங்கி இருக்கிறது. ஆனால் அதன் வனப்பும் வரலாறும் குறையாமல் இருக்க அந்த வண்ணத்தை பூசி வருவதாகச் சொன்னார். எதற்கு இந்த வண்ணம் என்று கேட்டேன். மகிழ்ச்சியின் குறியீடு என்றார். அது மட்டுமின்றி 1876 ம் ஆண்டு ராஜஸ்தானுக்கு வருகை புரிந்த வேல்ஸ் இளவரசரை மகிழ்ச்சியோடு வரவேற்க இந்த தடபுடல் நடந்தது என்று சொன்னார். வேல்ஸ் இளவரசர் வந்த புகைப்படங்களை அரண்மனையில் பார்க்க முடிந்தது.
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)