Skip to main content

நள்ளிரவில் எஸ்ராவுடன் ஒரு கோப்பை தேநீர் (பாகம் 2)



           அந்த வெட்ட வெளிக்கடையில் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோம். பேச்சின் திசை எங்கெங்கோ போனாலும் திரும்ப இலக்கியத்தின் மீதுதான் மையமிட்டிருந்தது. கடையிலிருந்து வெளியாகும் போது மணி ஒன்றைத் தாண்டியிருக்கும்.மீண்டும் நடந்தே அறைக்குச் சென்றோம்.
 எங்கள் பேச்சு மீண்டும் தொடர்ந்தது.
"நீங்கள் எழுதிய புத்தகம் கொண்டு வந்தீர்களா" என்று வினவினேன்.
" ஒரு ஏழெட்டு வகையில் மூன்று நான்கு காப்பிகள் கொண்டு வந்தேன்" என்றார்.
அவற்றுள் பாதிக்குமேல் நான் படித்துவிட்டவை. அவர் வைத்திருந்ததில் 'மௌனியின் படைப்புகளும் அடங்கும்.
"மௌனியின் கதைகள் புரிந்து கொள்ள சிரமமாயிற்றே' என்றேன்.
"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, நம்முடைய மன எப்பம்டி ஒரே சமயத்தில் பல இழைகளாக சிந்திக்கிறதோ, அதேபோலத்தான் அவர்கதைகளும் இயங்கும்" என்றார்."இப்போ நாம் பேசிக்கொண்டிருக்கும்போது எப்படி இன்னொரு இழைச் சிந்தனை வேறு ஒன்றுக்குத் தாவுகிறதோ,அது போலவே அவர் கதையும் தாவும். புரிந்துகொள்வது சிரமமில்லை" என்றார். மௌனியைப் பற்றி நான் வரைந்துவைத்த சித்திரம் இப்போது தெளிவாகத் தெரிந்தது. இதற்கு முன்னர் திலீப் குமார் எழுதிய "மௌனியுடன் சில ....' புத்தகம் முன்பே படித்திருந்தேன்.
அவரிடமிருந்த அந்த ஒரே நூலை என்னிடம் அன்போடு கொடுத்து வாசிக்கச் சொன்னார்.(கடைசி நாளில் அவர் எழுதிய ஐந்தாறு நூல்களை 100 ரிங்கிட் கொடுத்து வாங்கி வந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன்)


எனக்கு ஒதுக்கப் பட்ட அறை, மலேசிய எழுத்தாளர் சங்க நிர்வாகச் செயலாளர் விக்னேஸ்வரனுடையது. அந்த அறைக்குப் போகாமலேயே என்னை மறந்து எஸ்ராவுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். அப்போது என்னைத் தேடிக்கொண்டு விக்னேஸ்வரன் வந்தார். எஸ்ராவிடம் விடை பெற்றுக்கொண்டு  விக்னேஸ் அறைக்குச்சென்றேன். எஸ்ராவுடன் பேசியவை நினைவில் சுழன்றன.
மறுநாள் மாலை 4.00 மணிக்குத்தான் பயிலரங்கம் ஆரம்பம். அதுவரை  கடைத்தெருவுக்குப்  போகலாமென்று சொன்னார். காலையில் 9.00 மணிக்கு மேல் விடுதியில் பசியாற அழைத்துச் சென்றேன். பசியாறுதல் என்ற வார்த்தை தமிழ் நாட்டுக்காரர்களுக்குப் புதிய சொல்லாகவே அறிமுகமாகிறது.  எஸ்ரா இதில் விதிவிலக்கல்ல. தன் வலைதளத்திலும் இது பற்றி சொல்கிறார். மலேசியாவில் பிரபலமான காலை உணவு நாசி லெமாவைச் சாப்பிடச் சொன்னேன். நாசிலெமா என்பது அரிசிச் சோறுதான். அது தேங்காய்ப்பால் கலந்த சோறு. நெத்திலி மீன் (சம்பால்)கெட்டிக்கறியும்,  முட்டையும் கலந்து சாப்பிட்டால் அதன் உறைப்போடு காப்பியை அருந்தினால் ,அன்றைய காலையை உற்சாகமாக ஆக்கிவிடும். சுறு சுறுப்போடு இயங்கினால் நாசிலெமா ஒன்றும் செய்யாது. சற்று உட்கார்ந்து ஓய்வெடுத்துவிட்டு போகலாமென்றால் உங்களைத் தூக்கம் மிக அண்மையிலிருந்து கப்பென்று கவர்ந்துவிடும். மலேசியாவில் காலை உணவு  நாசிலெமாவாக இல்லாமலிருந்திருந்தால் நாடு இன்னும் முன்னேற்றம் அடைந்திருக்கும்.
எஸ்ரா ஒரு முட்டையைப் தட்டில் போட்டுக்கொண்டு வந்து,
" இது என்ன உணவு "என்று கேட்டார். எஸ்ரா தெரியாம்ல்தான் கேட்கிறாரா என்ற சந்தேகம் வந்தது.  எஸ்ரா லேசில் ஜோக் அடிப்பவர் அல்லர்.
"முட்டை" யென்றேன். ஏன் இவ்வளவு கெட்டித்தட்டிப்போய் இருக்கிறது என்று கேட்டார்.
"அது அவித்துப் பொறித்த முட்டை "என்றேன்.
"அவித்த முட்டையை ஏன் பொறிக்கவேண்டும் ?" என்று கேட்டார்.
"முட்டைக்கு இன்னொரு பரிமாணம் தரவேண்டுமே," என்றேன்.

காலை உணவை முடிப்பதற்கும் எங்களை முதலில் பசியாறச்சொல்லி விக்னேஸ் தன் வேலையை முடித்துக்கொண்டு வருவதற்கும் சரியாக இருந்தது. கோலாலம்பூரில் புகழ்பெற்ற  கடைத்தெருவான சௌக்கிட், மஸ்ஜிட் இந்தியா பக்கம் அழைத்துப் போய் விட்டு விட்டு 12.00 மணிக்குள் தயாராய் இருக்கும்படி சொல்லிவிட்டு மீண்டும் தன் பணியை கவனிக்கப் போய்விட்டார். ஒரு பேரங்காடிக்குள் நுழைந்து அங்குமிங்கும் சுற்றினோம். அவருக்கு டிஜிட்டல் ஒலிப்பதிவுக் கருவி வாங்க வேண்டுமென்று சொன்னார். அவருடைய பிள்ளைகளும் உறவினர் பிள்ளைகளும் எதை எதையோ வாங்கி வரும்படி சொல்லி அனுப்பியதைத் தேடினார். டிஜிட்டல் ஒலிப்பதிவுக் கருவியை இரண்டொரு இடத்தில் விசாரித்துவிட்டு ஒரு கடையில் வாங்குவதென முடிவெடுத்தோம். 240 ரிங்கிட் விலை போட்டிருந்ததை 200க்குக் கேட்டேன். 205 என்ற சமரசத்துக்கு வந்தோம். அதன் இயக்கம் குறித்து விளக்கச் சொன்னேன். கடைக்காரச் சீனர் அதனோடு ரொம்ப நேரம் போராடியபடி இருந்தார். வயதானவர் என்பதால் சற்று தடுமாறினார். அவனிடம் கேட்டு வாங்குங்கள். அதன் நுட்பம் குறித்து நானே  சீக்கிரம் தெரிந்து கொள்வேன் என்றார். எந்தப் புதிய  பொருள் வாங்கினாலும் அதன் முழு இயக்கம் குறித்து கொஞ்ச நேரத்தில் தெரிந்துகொள்வேன் என்றார். எனக்கு அதெல்லாம் சரியா வராது என்றேன். இனிமேல் அவர் வலைப்பூவில் அவர் இலக்கிய மேடைகளில் பேசிய பேச்சுக்களை ஒலி வடிவில் அப்படியே கிடைக்கும் . நன்பகல் 12.30 க்கெல்லாம் விக்கி எங்களை ஏற்றிப்போக வந்துவிட்டார்.
மதியம் 1.00 மணிக்கு கோலாலம்பூரில் புகழ்பெற்ற மீன் தலை கறி கடையில் பகல் உணவு. 2.00 க்கெல்லாம் விடுதியில் இருந்தோம்.
இனி மூன்று நாளைக்கு அவருக்கு தொடர்ந்து இலக்கியம் குறித்துப் பேச விருப்பதால் அவரை தனிமையில் விடுவது சாலச் சிறந்து என முடிவெடுத்து நான் விலகிக்கொண்டேன். இருப்பினும் அவ்வப்போது பேசிக்கொண்டுதான் இருந்தோம்.






Comments

பசியாறுதல் என்ற வார்த்தை தமிழ் நாட்டுக்காரர்களுக்குப் புதிய சொல்லாகவே அறிமுகமாகிறது.

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின