Skip to main content

11. பனிப்பொழிவில் 10 நாட்கள்






ஆக்ராவிலிருந்து ஜெய்ப்பூருக்கு போகும் நெடுஞ்சாலையில் ஓர் உணவுக்கடை, சாப்பாட்டுக்கு முன் உண்ணும் டிசெர்ட் வகை, ஹாட்டலில்,ஜெய்ப்பூர் சாலை.



 ஜெய்ப்பூர் அரண்மனை, ஆக்ரா  செங்கோட்டை, ஜெய்ப்பூர் கோட்டை


 கோட்டைகளும் ராஜ வம்சமும்
   ஜெய்ப்பூரிலிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் குஜார் சாதிப்பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக செய்தி கிடைத்தது. தங்கள் இனத்துக்கு அரசாங்கம் ஒதுக்கிய பொருளாதார வேலை வாய்ப்பு விகிதம் மிகக்குறைவு என்று அது கூட்டப்பட வேண்டுமென்ற நோக்கத்தொடு நடக்கும் போராட்டம் தான் அது. இந்தியாவில் கணக்கற்ற சாதி பிரிவினைகள் உண்டு. ஒரு குறிட்ட சாதிக்குள்ளே நூற்றுக்கணக்கான உட்பிரிவுகள் வேறு. சில இடங்கள் குறிப்பிட்ட உட்பிரிவினருக்குள்ளேதான் மணம் புரிந்து கொள்கிறார்கள். உறவு முறை கொண்டாடுகிறார்கள். அவர்கள் குலதெய்வம் , சிறுதெய்வம் கூட வேறுபடும். இந்து சமயத்தில் மக்கள் புரிதலுக்கேற்ப பல்லாயிரம் சித்தாங்கள் உருவாகின. அவர்கள் வாழ்வு  முறைக்கேற்ப, கலாச்சாரத்திற்கேற்ப, கடவுள்கள, சிறுதெய்னங்கள், குலதெய்வங்கள், கோயில்கள், பல்லாயிரம் ஆண்டுகளாக கூடியும் குறைந்தும், காணாமற்போயும் நிலைத்தன. சில சிதைந்தும் கலைந்தும் சமகாலச்சமூக நம்பிக்கைக்கு ஏதுவானதாக பொருத்திக்கொண்டன. அவர்கள் பண்பாடும் கடவுள் வணக்கமுறை கூட வெவ்வேறாக இருக்கும். இந்தச்சாதி வேறுபாடு – பிரிவினையைக் கொண்டு வந்தவர்கள் ஆரியர்கள். அதனை சுயலாபத்துக்காக ஊதிப்பெருக்கியவன் வெள்ளையன். Divide and Rule (பிரித்து ஆளுதல்) முறை அவர்களை இந்தியாவில் பலமாக காலுன்ற வைத்தது. அதனால் இந்தியரிடையே பிரிவினைகளை வளர்த்துவிட்டது. கலாச்சாரத்திற்கேற்ப,  அந்தப் பிரிவினையின் பாதிப்பை  நாட்டிலும் காணலாம். divide and rule வழியை மலேசியாவிலும் யாருக்கும் ‘வலிக்காமல்’ பயன் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் அறிந்தவர்கள் இதனை உணர்வார்கள்.
இந்தியாவில் வேரூன்றிவிட்ட சாதிமையால் மக்கள் எல்லாத்துறையிலும் பின்தங்கி இருக்கிறார்கள்.. 
         போலிஸ் சாலையை மூடிவிட்டு எங்களை எச்சரித்தனர். இப்போது அந்த இடத்தைக் கடந்து போவது ஆபத்து என்று கூறப்பட்டது. ஜெய்ப்பூருக்குப் போக வேறு சாலை இல்லை.  ஜெய்ப்பூரைத் தவிர தங்குவதற்கு வசதியான ஊர் ஏதும் இடையில் இல்லை. மேய்ன் சாலையிலிருந்து பிரிந்து ஒரு மணிநேரம் பயணமானால் சின்னச் சின்ன பட்டணங்கள் உள்ளன. அது சாத்தியப்படாது. களைப்பூக்கு ஒரே நிவாரணம் கண்ணயர்தல். அது கிடைக்குமா?
என்ன செய்யலாமென்று தோமஸ¤க்கும் தெரியவில்லை. அக்ரா கடைத்தெருவில் அலைந்து திரிந்த களைப்பு பசியைத் தூண்டிவிட்டிருந்தது.
   திறந்த கடைகளில் சாப்பிடக்கூடாது என்ற எங்கள் கங்கணம் மெதுவாக பிடியவிழ ஆரம்பித்தத்து. புதிதாக இந்தியா பயணமாகிறவர்களுக்குத் திறந்த இடத்தில் விற்கப்படும் நீரோ ஆகாரமோ ஆபத்தில் தள்ளி விடும். இந்த அறிவுரையைப் புறந்தள்ளியவர்கள் வயிறுப் பிசைய மருத்துவமனைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அனுபவசாலிகள் சொன்னா கேக்கணும்!
   நாம் கடந்து வந்த வழியில் ஒரு கடை இருக்கிறது. அக்கம் பக்கத்தில்கூட கிராமங்கள் தென்படவில்லை! தனித்தே தன்னை காட்டிக்கொள்ளும் கடை. ஆபத்துக்குப் பாவமில்லை. அங்கே சாப்பிடலாமென்றார். நான் வீட்டிலிருந்து கிளம்பும்போதே வயிற்றுக்கோளாறுக்கு மருந்து கொண்டு வந்திருந்தேன். எனவே எல்லாரையும் சாப்பிடச்சொல்லி தைரியமூட்டினேன்.
       ‘வெவரமான ஆளுங்கிறீங்களா’ இருக்கட்டும்.  இருக்கட்டும்.  இன்றைக்கு ஜெய்ப்பூர் போவது சாத்தியமில்லை. சாப்பிட்டுவிட்டு காரிலேயே படுத்துக்கொள்ளுங்கள் என்றார் தோமஸ். நள்ளிரவு நேரம், புதிய இடம். மொழி தெரியாத ஊர். என்ன கொடும சார் இது?
   வேறு வழியில்லை போய் சாப்பிடுவோம்.
   நம்ம ஊர் கம்பத்தில் உள்ள கடை மாதிரி இருந்தது. அந்த இடத்தின் பெயர் மோவா.
   உணவு ஆர்டர் கொடுத்தோம். இந்தி தெரிந்த தோமஸ் இருந்ததால் தப்பித்தோம். உணவை அவர்தான் ஆர்டர் கொடுத்தார். ‘நான்’ வகைதான். சோறு கீறென்று மூச்சுவிடக்கூடாத இடம். தொட்டுக்கொள்ள இரண்டு வகை சைவப் பிரட்டல் வகை கொண்டு வந்தார்கள். ரொட்டி நெய்யில் சுட்டது. காலி பிளாவர், உருளைக்கிழங்கு , பெப்பர் மிளகாய் , கொண்டைக்கடலை கலந்து செய்யப்பட்ட பிரட்டல். அந்த உணவு வரும் முன்னாலேயே டிசர்ட் வகை உணவை கொண்டு வந்து வைத்தார்கள். பச்சை முள்ளங்கி சீவல், வெள்ளரி சீவல், மிளகாய்ப்பொடி மிளகுப்பொடி தூவி, துண்டு பண்ன எலுமிச்சை கலந்து  கொண்டு வந்து வைத்துவிட்டுப் போனார்கள். சாப்பிட்டுப் பார்த்தோம் முதலில் பிடிக்கவில்லை. பசிக்குத் தெரியுமா பிடித்ததும் பிடிக்காததும்? சமைக்காத பச்சை உணவு. அக்ரா ஜெய்ப்பூர் முழுதும் உணவு பரிமாறுவதற்கு முன்னால் இதுதான் டிசர்ட் டாக வைக்கிறார்கள். பழகிவிட்டால் சாப்பிடலாம். அவர்களின் முள்ளங்கி காட்டமற்று இருக்கிறது. சாப்பாடுக்கான செலவு 525 ரூபாய். அந்த இடத்துக்கு  அந்த விலை சற்று அதிகம் தான். இருப்பினும் அங்கே சாப்பிட்டதற்கு மட்டுமே சர்விஸ் வரிக் கட்டணம் இல்லை! ஒட்டுக்கடையில் வரி கிரியெல்லாம் ஏது?
    எண்ணெயில் மிதக்கும் பிரட்டலைச் சாப்பிட கொஞ்சம் பயந்தேன். பசி என்ன செய்வது? உணவு சுவை இல்லை என்றாலும் வெளி நாட்டுக் காரர்கள் என்று கடை காரர் அன்போடு உபசரித்த விதத்தை மறக்க முடியவில்லை. நள்ளிரவில் புதிய இடத்தில் வேறெங்கே போய்த்தேடுவது உணவை. உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தார்.
   இதற்கிடையில் தோமஸ் சில இடங்களுக்குப் போன் செய்து நிலவரத்தை விசாரித்துக் கொண்டிருந்தார்.
   ஒரு வழியாக ஒரு மணி நேரம் கழித்து ‘பந்த்’ முடிந்துவிட்டது என்ற செய்தி கிடைத்ததும் கிளம்பினோம்.
   எப்போதும் போலவே அன்றிரவும் தாமதமாகத்தான் போய்ச்சேர்ந்தோம். ஜெய்ப்பூருக்குள் நுழையும்போதே கோட்டை சுவர்கள் தொடராக கட்டப்பட்டிருப்பதைப் பார்க்க முடிந்தது.

  ராஜஸ்தானில்தான் ‘காதல் கோட்டை’ படம் எடுக்கப்பட்டது. நான் நேற்று பார்த்த வீர பாண்டிய கட்ட பொம்மன் படமும் அங்கேதான் படமாக்கப்பட்டிருந்தது. அஜித் தேவயானி நடித்த காதல் கோட்டை சக்கை போடு போட்டது. அஜித் தேவயானியும் மட்டும் நடிக்கவில்லை கேமாரவுக்குள் பிடிபட்ட ராஜ்ஸ்தான் கோட்டையும் அரண்மனையும் அதில் நடித்தது அப்படத்தின் வெற்றிக்கு வழிகோலியது. காதல் கோட்டை படமாக்கபட்ட இடங்களையும் பின்னர் போய்ப் பார்த்தோம். ஐஸ்வரியாராயும் கிரித்திக் ரோஷனும் நடித்த ‘ஜொடா அக்பர்’ படம் முழுக்க எடுத்த அரண்மனையையும் போய்ப் பார்த்தோம்.
 ராஜஸ்தானின் தலை நகரான  ஜெய்ப்பூரின் விடுதி கலை நயத்தோடு மிளிர்ந்தது. மினியேச்சர் ஓவியத்துக்கும் ,  (உரோமம் அளவுக்கே உள்ள தூரிகையால் வரையப்பட்ட ஓவியத்தைக் கூர்ந்து பார்த்து கண் இமைக்காமல் வரையப் பட்டது) ஒட்டக உரோமத்தால் நெய்யப்பட்ட கம்பலி, பல்வேறு கைவினைப் பொருட்களுக்கும் புகழ்பெற்றது ஜெய்ப்பூர். தோமஸ் எங்கும் அலையாமல் ஒரு விடுதியில் கொண்டு போய் இறக்கினார்.
அந்த விடுதியின் வரவேற்பரையும் இவ்வாறான அழகிய ஓவியம்தான் எங்களை வரவேற்றது. வண்ண ஓவிய மண்டபத்துக்குள் நுழைந்துவிட்டது போன்ற பிரம்மை உண்டானது.   மறுநாள் காலையிலேயே  சுற்றுலா வழிகாட்டி மனோஜ் லோபியில் காத்திருந்தார்.
   ஆங்கிலம் சரளமாகப் பேசினார். ஆறடி உயரம் இருந்தார்.
ஜெய்ப்பூரில் என்ன தொழில் செய்கிறீர்கள் என்று கேட்டேன். முழு நேர சுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்கிறேன் என்றார். இங்குள்ள மக்களில் எழுபது விகிதத்தினர் சுற்றுலா துறையை நம்பியே வாழ்கின்றனர். இந்தியாவிலேயே வெளிநாட்டினர் அதிகம் சுற்றிப்பார்க்கவரும் இடம் ராஜஸ்தான் என்று சொல்லும்போது எழுபது விகித மக்கள் சுற்றுலாத்துறையை நம்பி இருப்பது சரியான தகவல்தான். இது மழை காணாத ஊர். பாருங்கள் மழை மேக வரவை தடுக்கவே ஜெய்ப்பூரைச் சுற்றி  மலைகள் இருக்கின்றன என்று காட்டினார். தவறிகூட மழை பொழியாத அளவுக்கு முற்றிலும் பாறையிலான மலைக் கூட்டம். ஜெய்ப்பூரிலிருந்து இன்னும் 100 கிலோ மீட்டர் போனால் ‘தார்’ பாலைவனத்தைப் பார்க்கலாம் என்றார். பாகிஸ்தான் குஜராட் ராஜஸ்தான் எல்லையாகவே தார் பாலைவனம் திகழ்கிறது. கனமான பொருட்களை ஏற்ற ஒட்டகங்கள் அதிகமாகப் பயன் படுத்தப்பட்டு வந்தன. மழை காணாத ஊரில் ஒட்டகப் பயன்பாடு மலிந்து காணப்படும். ஒட்டகம் பல நாட்களுக்கு தண்ணீர் இல்லாமல் வாழும்.
 விடுதி தண்ணீரில் குளிக்கும் போதே இதனை உணர்ந்தேன். வெளி மாநிலத்திலிருந்து தண்ணீர் வருவதாக சொன்னார் மனோஜ். ‘நீரில்லாத ஊர் பாழ்’ என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால் அதற்கு விதிவிலக்காக அமைந்து ஊர் ராஜஸ்தான். சந்திரகுப்த் மன்னர் வம்சம் கட்டிய கோட்டைகளும் அரண்மனைகளும் சுற்றுலாத்துறையை வளர்த்துவிட்டதால் தண்ணீர் பஞ்சம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் செய்துவிட்டார்கள் ஆட்சியாளர்கள். என்ன விலை கொடுத்தாவது தண்ணீரை வாங்கிக்கொள்ளலாம்.
    மன்னர்கள் வாழ்ந்த புதிய அரண்மனையை முதலில் பார்த்துவிட்டு பழைய அரண்மனைக்குப் போகலாமென்று முடிவெடுத்தோம்.   தொடரும்...

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த