Skip to main content

ஆணாதிக்கம் பெண்ணடிமை என்ற மாயை

                                 ஜெயமோகனோடு சுவாமி பிரம்மானந்தா அவர்கள்
(அச்சில் இருக்கும் என் சிறுகதைத் தொகுப்புக்கு சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி வழங்கிய முன்னுரை இது.)


உலகில் இருவர் சேர்ந்திருப்பது மிகச்சிரமமான காரியம். ஏனெனில் அடிப்பபடையில் மனிதன் தனித்தன்மை வாய்ந்தவன். உலகிலேயே சுதந்திர இச்சையுடன் பரிணாம வளர்ச்சி பெற்றவன் மனிதன் மட்டுமே. அவன் மற்றவர்களோடு பொருந்தி வாழ முடியாததற்கு காரணமே அவன் பகுத்தறிவு உள்ளவன் என்பதாலேயே. என்னதான் இயற்கையான உடற் தேவை காரணமாக அவன் கூடி வாழ விரும்பினாலும் ஏதோ ஒன்று அவனுக்குள்ளே இருந்து அவனை அந்நியப்படுத்திக்கொண்டே இருக்கிறது. தன் உணர்ச்சியின் உச்ச நிலையைப் பகிர்ந்துகொள்ள உறவுகள் தேவைப்பட்டாலும் அந்த உறவுகளால் ஏற்படும் உரசல்களால் மீண்டும் மீண்டும் அந்நியபட்டே போகிறான். கொந்தளிப்புக்களையும் மனவலியையும் பகிர்ந்துகொள்ள சக மனிதர்கள் தேவைபட்டாலும் அவர்கள் மேல் உள்ள ஆழ்ந்த அவநம்பிக்கை மீண்டும் மீண்டும் அவனை தூரத்தில் கொண்டுபோய் நிறுத்திவிடுகிறது. இதற்கு முக்கியக் காரணம் அவன் தன்னிலை தவிர்த்து வேறெதிலும் பாதுகாப்பை உணராத நிதர்சனம்தான். அதனால்தான் மனிதர்களுக்குக் கண்ணுக்குத்தெரியும்  மனித நம்பிக்கையைவிட  கண்ணுக்குத்தெரியாத தெயவ நம்பிக்கைகளில் அதிகப் பற்று ஏற்படுகிறது. எவ்வளவுதான் உறவுகளின்மேல் உள்ள நம்பிக்கை மனித வாழ்வுக்கு வலிமை சேர்த்தாலும் அந்தரங்கத்தில் அவன் தன்னைத் தனியனாகவே உண்ர்கிறான்.
இதனால் ஏற்படும் அழுத்தத்தால் அவன் உறவுகளைப் புறக்கணிக்கிறான்.
இந்த உறவுச்சிக்கல்களில் ஏற்படும் அவல நிலையையும் துரோகங்களையும் என்னிடம் கிடைத்த  இருபாலர் உறவு குறித்த கதைகளில் திரு கோ.புண்ணியவான் அவர்கள் நுணுக்கமாக ஆராய்கிறார். குறிப்பாக ஆண் பெண்  உறவுகளில் ஏற்படும் சிடுக்குகளை சிக்கெடுக்கும் முயற்சிகளில் அவர் கதைகள் முயற்சி செய்கின்றன.
         பொதுவாகவே இருபாலர் உறவுகளும் சுயநலமிக்கதாகவே காட்டப் படுகின்றன. தன்னுடைய தேகப்பசி  தீர்ந்த பின்னர் தூக்கி எறியப்படும் உறவுகள் இளமைக்கால மிகை உணர்ச்சியால் உந்தப்பட்டுப் பின்னர்  கைவிடப்படும் காதல்கள் பொதுவாகவே ஆண் வர்க்கத்தால் பெண்களுக்கு இழைக்கப்படும் துரோகங்கள்தான் கதைக்களனாகின்றன.
         நீரிலிருந்தும் நழுவும் மீன்கள் கதையில் அம்மா என்ற மரபு சார்ந்த புனித பிம்பம் உடைத்தெரியப் படுவது நவீன கால அம்மாக்களை  அப்பட்டமாகம் படம் பிடித்து காட்டுகிறது. இதனை ஒரு சமூகப் பிரச்சினையாக முன்வைக்கும் ஆசிரியர் சமூகத்துக்கு சுயநல்மில்லா பொறுப்புமிக்க கடமையை உணர்த்த முயற்சி செய்கிறார்.
         பொதுவாகவே பெண்கள் பலவீனமானவர்கள் என்று கட்டமைக்கப்படும் நம் சமூகத்தில் ஒரு பெண் எவ்வித ஆண் துணையில்லாமல் தன்னிச்சையோடும் சுய மரியாதையோடும் வாழ முடியுமென்று எதிர்வினை ஆற்றுகிறார் கதை நாயகி. அடிப்படையில் ஆண் பெண் என்ற பேதம் பெரிதாக ஒன்றும் கிடையாது. இரு பாலருக்கும் பொது அம்சமாக இருப்பது நான் என்ற அகங்காரம்தான். ஆண்வர்க்க மேலாதிக்கத்தினால் பொறுமை, கட்டுப்பாடு, ஒழுக்கம் என்ற சமூகப் பயிற்சிகளால் பெண்களுக்குச் சற்று அடங்கி இருந்தாலும்  ஆழ்மனதில் வன்மமே குடிகொண்டுள்ளது. ஒரு ஆண்மகனுக்கு ஆணவம் என்பது தன் அடிப்படை குணம் என்று நினைக்கும் தோறும் பெண்களுக்கு அது அடக்கி ஆளும் ஆளுமையாக ஆழ்மனதில் கொழுந்து விட்டு எரிந்துகொண்டே இருக்கிறது. தக்க தருணமும் அதற்கான சந்தர்ப்பமும் பிறக்கும்போது அது வன்முறையாகவே வெடித்து உறவுகளை உடைத்தெறிகிறது.
        அடிப்படையில் இரண்டு ஆணவங்களின் மோதல்தான் உறவுகளைப் பிய்த்து எறிகிறது  என்று தெரியாமல் ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தின்மேல் அடிமைப்படுத்துகிறது என்று வர்க்க சாயம் பூசுகிறது. இந்தக் குற்றஞ்சாட்டும் குணம் ஆணவத்திலிருந்து பிறந்து வந்ததுதான்.
        இவரின் பெண்ணியம் சார்ந்த சிறுகதைகள் மூலமாக இக்கருத்தையே வாசக மனங்களுக்கு அறிவுறுத்துகிறார் என்று தோன்றுகிறது. என் வசம் கிடைத்த சில கதைகளைப்பற்றி கருத்து மட்டுமே இது.

சுவாமி பிரம்மாநந்த சரஸ்வதி
கூலிம் தியான ஆசிரமம்

   
 


Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த