Skip to main content

புதுவையிலிருந்து புறப்பட்ட ஒரு தமிழ்ப்புயல்.

புதுவையிலிருந்து புறப்பட்ட ஒரு தமிழ்ப்புயல்.(பேராசிரியர் மு.இளங்கோவன்)
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHrFhMs9DnmwloKfdw9kMqT5319Mo2TumBmFIEc3cZcOUqNT1LasMdAnMeSORu-uOJUo2NwU3cnbg8BRM-duVZP2tt4Z8PvMlTJMJhPSPKrvCTsOawOisKOoOCX0y8FAj-Gn6nHBn3f3AR/s1600/thiru+2.JPG
2003 ம் ஆண்டு என் நினைக்கிறேன். கெடா மாநிலத் தமிழ் ஆசிரியர் சங்கத்தோடு இணைந்து சிங்கப்பூரில் நடந்த உலகத்தமிழாசிரியர் மாநாட்டுக்குச் சென்றிருந்தேன். போதானா முறைகளில் நவீன மாறறங்கள் நிகழ்த்தப்படவேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்பட்ட மாநாடு அது. மூன்று நாட்கள் நடந்த அந்த ஆய்வரங்கில் ஒரு அமர்வு முடிந்து வெளியே வந்த தருணத்தில் இன்னொரு ஆய்வரங்கிலிருந்து சிரிப்பொலி கேட்டுகாண்டிருந்தது. என்னதான் நடக்கிறது என்று நானும் உள்ளே நுழைந்தேன். முப்பது வயதுக்குள் இருக்கும் ஒரு இளம் பேராசிரியர் நாட்டுப்புறப்பாடல் தலைப்பில் பேசிக்கொண்டிருந்தார். நுழைந்த ஒரிரு நிமிடத்தில் நான் அவரின் பேச்சில் லயிக்கத்துவங்கினேன். நாட்டுப்புறப்பாடலைப் பாடியவாறே தன் பேச்சாற்றலால் அனைவரையும் தன்வயப்படுத்திக்கொண்டிருந்தார்.

அந்தச் சந்திப்பு முடிந்து 2007ல் நான் புதுவையில் ஒரு இலக்கிய நிகழ்வில் மீண்டும் அவரைச் சந்திக்கும் நல்வாய்ப்பு நேர்ந்தது.
      “சிங்கப்பூரில் பேசிய இளங்கோவந்தானே நீங்கள்” என்றேன்.
      “ஆமாம் “என்றார்.
       “மலேசியாவுக்கு வருவீர்களா” என்றேன்.
      “வாய்ப்பிருந்தால் கண்டிப்பாய்” என்றார்.
      “மலேசியாவுக்கு வந்தால் என் ஊரான சுங்கைப்பட்டாணியில் நீங்கள் பேச வேண்டும்” என்று அன்புக்கட்டளை விடுத்தேன்.
      “சரி” என்றார்.
இது எப்படி வாய்க்கப்போகிறது என்ற சந்தேகத்தோடே நான் விடைபெற்றேன்.

இவ்வருடம் மே மாத வாக்கில் அவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது.
அவர் சிங்கை மலேசியாவுக்கு ஒரு குழுவோடு வருவதாக அதில் குறிப்பிட்டிருந்தார். இந்த அரிய வாய்ப்பைப் பயன் படுத்தி, நீங்கள் எங்கள் ஊருக்கும் வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். கொள்கையளவில் ஒத்துக்கொண்டார். அதற்கப்புறம் அவரிடமிருந்து தகவல் வரவில்லை.
அவர் கொடுத்த கால அவகாசப்படி இந்நேரம் சிங்கையில் இருக்கவேண்டுமே என்று சிந்தித்தபடி மின்னஞ்சலில் அவர் தொடர்புகொள்ளச்சொன்ன என்னோடு பேசினேன். பேராசிரியர் மு.இளங்கோவன் மலேசியாவுக்குப்புறப்பட்டுவிட்டதாகப் பதில் வந்தது. மலேசிய தொடர்பு எண்ணையும் சிங்கை நண்பர்கள் கொடுத்தார்கள். அவர் திரு முனியாண்டி. உடனே அவரோடு பேசினேன். பேராசிரியரின் உள்ளூர் தொடர்பு எண்ணும் கிடைத்தது.

“நீங்கள் என் ஊருக்கு வருவதாக சொன்னீர்களே. வர இயலுமா?” என்றேன்.
“நான் இங்குள்ள ஏற்பாட்டாளர்களிடம் பேசிவிட்டுச்சொல்கிறேன்,” என்றார்.
நான் அவரை விடுவதாயில்லை. “உங்கள் ஏற்பாட்டாளர் தொடர்பு எண்ணைக் கொடுங்கள் நான் தோது செய்கிறேன்,” என்றேன். என் நோக்கமெல்லாம் அவரின் பேச்சை என் ஊர் மக்கள் கேட்க வேண்டுமென்பதுதான். ஒரு நாள் கழித்து என்னோடு பேசுவதாகவும் பதிலளித்தார். நான் அதற்குக்காத்திராமல் ஏறபாட்டாளர்களிடம் பேசி நிகழ்ச்சிக்கு அவரை இழுத்துக்கொள்ள ஏதுவானதெல்லம் செய்து முடித்துவிட்டேன்.
அதன் பின்னர் அவரிடம் பேசி அவர் வருவதை ஒத்துக்கொள்ள வைத்தேன். மே 21ம் நாள் அதிகாலை 4.00 மணிக்கு கோலாலம்ப்புரிலிருந்து சுங்கைப்பட்டாணி வருவதாக ஏற்பாடாகிக்கொண்டிருந்தது. 22ம் நாள் அவரின் உரை நிகழ்வுக்கான முன்னேற்பாடெல்லாம் 21ம் நாள்தான் செய்ய ஆரம்பித்தேன்.
22ம் தேதி அவரைப்பேருந்து நிறுத்துமிடத்திலிருந்து அழைத்துவந்து அன்று காலையே அவரின் விருப்பப்படி கடாரம் கண்ட சோழபுரத்துக்கு அழைத்துச்சென்று பார்க்கச்செய்தேன் .மிகுந்த ஈடுபாட்டோடு கல்வெட்டுகளையும் தொல்பொருள் கூடத்தையும் பார்த்து மகிழ்ந்தார். நிழற்படமும் எடுத்துக்கொண்டார். தான் கண்டவற்றைப்பற்றி அவருடைய வலைத்தளத்தில் எழுதியும் வருகிறார். ( mu.ilanggovan.blogspot.com)

அன்று மாலை 6.00 மணிக்கு அவருடைய பேருரை நடைபெற்றது. நாட்டுப்புறப்பாடல் எனும் தலைப்பு கொடுத்திருந்தேன். நண்பர் இரண்டரை மணி நேரம் விடாத மழை மாதிரி எங்களை தமிழ் மழையில் நனைத்தெடுத்துவிட்டார். இப்படிப்பட்ட சிறந்த பேச்சு சுங்கைப்பட்டாணியில் நடந்தது  இதுதான் முதல் முறை என்று சொல்லும்படியாயிற்று.
பயணக் களைப்பிலும் தமிழ் விருந்தளித்த பேராசிரியருக்கு நன்றி.

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின